Sunday, November 23, 2025

ஒரே ஒரு பாடல்...


அந்தப் படத்தில் அவர் ஒரே ஒரு பாடல்தான் எழுதினார்.. ஆனால் அந்தப் பாடல் இருக்கையில் அமுதமும் தேனும் அவசியமில்லை என்று தோன்றும். ஆம், அதே பாடல்தான்! "அமுதும் தேனும் எதற்கு?" (தை பிறந்தால் வழி பிறக்கும்)
சுரதா... அழியாத பாடலை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்! அவரை 'உவமைக் கவிஞர்' என்பர் அன்பர்.
பாரதிதாசன் மேலிருந்த பற்றினால் அவர் இயற்பெயரை ஒட்டி சுப்புரத்தின தாசன்... சுருக்கமாக சுரதா.
சில படங்களுக்கு வசனம் எழுதியதில் ஒன்று 'ஜெனோவா.' முக்கியமானது எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த 'அமரகவி'
காதில் வந்து தென்றல் போல் ஒலிக்கும் "கண்ணில் வந்து மின்னல் போல்..." பாடலும் இவருடையதுதான். (நாடோடி மன்னன்) கடைசியாக வெளிவந்த பாடல் "நெருங்கி நெருங்கி ..." ('நேற்று இன்று நாளை')
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..." என்ற பாடலை விட வேறொன்று வேண்டுமா இவரது இசைத்தமிழ் சொல்ல?
"வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைத்ததில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை!"
என்று முடியும் அந்த பாடல்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!