Tuesday, May 24, 2011

மனதின் இசை







மனதின் இசை
 
வரைத் திறந்திட
திவலைகள்  தெறித்திட
கவலைகள் வழிவிட
மனதில் கேட்கிற
தீம் தரி கிட...









விடிகாலை

ன்  நினைவுடனே தூங்கி
உன் நினைவுடனே எழுந்து
ஒரு நீண்ட பகலாக
வாழ்க்கை!

Wednesday, May 18, 2011

கனவு வீடு


ந்தக் கிராமத்துக்கே பெருமை சேர்த்துக் கம்பீரமாய் எழும்பியிருந்தது அந்த வீடு.

''என்ன பரமசிவம், உங்க பையன் போட்டிருக்கிற வீடு பிரமாதமா இருக்கே?'' கேட்டார்  நண்பர் மாதவன்.

''ஆமாங்க, சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப அடிக்கடி சொல்லுவான், 'நான் வளர்ந்து பெரிய ஆளானதும் நம்ம ஊரில் பிரம்மாண்டமா ஒரு வீடு கட்டுவேன்'னு. இப்ப கட்டிட்டான்,'' என்றார் சிரித்தபடி.

''சென்னைக்குப் போய் பிரபல  டைரக்டர் ஆனபிறகு உங்களைக் கண்டுக்கலேன்னு வருத்தப் படுவீங்களே அடிக்கடி, இப்ப நம்ம ஊர் தேடி வந்திருக்கிறான் உங்க பையன்.  இனி எல்லாம் சரியாயிரும்.''

''உங்க வாக்கு பலிக்கட்டும்!'' என்றார் பரமசிவம்.

டுத்த மாதம்.

ஷூட்டிங் முடிந்ததும் வீடு செட்டைப் பிரித்துச் சென்றனர் படக் குழுவினர்.

ஏதோ கொஞ்ச நாளாவது மகனைப் பார்க்க முடிந்ததே என்று திருப்திப் பட்டுக்கொண்டார் அவர்.

/\/\/\/\/\

(குமுதம் 14-01-2009 இதழில் வெளியானது)

Saturday, May 7, 2011

மடிப்புகள்


ணவன் துணிகளுக்கு இஸ்திரி போடுவதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராஜி.

எத்தனையோ பையன்களின் யூனிஃபார்ம் சட்டைகளை அயன் பண்ணித் தருகிற கணவனின் பெட்டியால் தங்கள் மகனின் யூனிஃபார்ம் சட்டையையும் ஒரு நாள் அயன் பண்ணி அதை அவன் ஜம்மென்று போட்டுக்கொண்டு போகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பவும் போல பீறிட்டெழுந்தது.

ஆனால் ராமசாமிக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. எதிர் ஃபிளாட்களின் மொத்தத் துணிகளும் காலையிலேயே வந்து குவிந்து விடும்.

இன்றைக்கு எப்படியாவது விசுவின் சட்டையை அயன் பண்ண வைத்து விடணும் என்று தீர்மானித்தாள் ராஜி.

வசரம் அவசரமாக இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ''கடவுளே, போச்சு!'' என்று கத்தினான்.

''என்னங்க ஆச்சு?''உள்ளிருந்து ஓடிவந்தாள் ராஜி.

''பெட்டி முனை கீறி சட்டை கிழிஞ்சிட்டது. அடடா, இது அந்த டி த்ரீ ஃ பிளாட் கோவிந்தனோடது ஆச்சே! லேசில் விடமாட்டாரே?''

''கவலைப் படாதீங்கப்பா!'' என்றொரு குரல் கேட்டது. விசு.

''இது என் சட்டைதாம்பா. எப்படியோ அந்தத் துணிகளோடு சேர்ந்து விட்டிருக்கு!''

''அப்பாடா!'' பெருமூச்சு விட்டான் ராமசாமி. ''வேறே சட்டை போட்டுக்கடா. சாயந்தரம் அம்மா தைச்சுத் தந்துடுவா.''

காலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.


( 'குமுதம்' 07-02-2005 இதழில் வெளியானது )