Wednesday, December 31, 2014

நல்லதா நாலு வார்த்தை.... 40.


’இதோ, வாழ்க்கை 
இனிதாகி விடுமென்று 
எப்போதுமே அவன் 
எதிர்பார்ப்பதால்
மனிதனின் நிஜ வாழ்வு 
மகிழ்வானதே.’
-Edgar Allan Poe
(‘Man’s real life is happy, chiefly because
he is ever expecting that it soon will be.’)

<><>

’பணம் இந்த உலகை 
சுற்ற வைக்கிறதென்றால்
அது தறிகெட்டு ஓடாமல் 
பார்த்துக் கொள்கிறது 
நகைச்சுவை.’
- Craig Kimberley
(‘If money makes the world go round, it’s humour
that keeps it from spinning out of control.’)
<><>

‘தங்கள் 
கனவுகளின் வனப்பில் 
நம்பிக்கை கொண்டவர்களுக்கே 
உரியது வருங்காலம்.’
- Eleanor Roosvelt
(‘The future belongs to those who believe
in the beauty of their dreams.’
<><>

'புதிய யுக்தி ஒன்றுடன் 
வரும் மனிதன் 
பித்துக்குளி எனப்படுகிறான்
அது 
வெற்றி பெறும் வரையில்.’
- Mark Twain
(‘The man with a new idea is
A crank until the idea succeeds.’)
<><>

‘நிரப்புவதற்கு நிறைய விஷயம் இருந்தால் 
ஒரு நாளுக்கு நூறு பைகள்!’
- Friedrich Nietzsche 
('When one has much to put in them, 
a day has a hundred pockets.')
<><>

’பாதி சரியாக எப்போதும் இருத்தலை
பாதி நேரம் சரியாக இருத்தல்
முறியடித்து விடுகிறது.’
- Malcolm Forbes
(Being right half the time beats
being half-right all the time.)
<><>

’ஒன்றாய்ச் சிரிக்கவல்லமையே 
அன்பின் சாரம்.’
- Francoise Sagan 
(’The ability to laugh together is the essence of love.’)

><><><><

(படம் - நன்றி : இணையம்)

Monday, December 22, 2014

வித விதமாக..



அன்புடன் ஒரு நிமிடம் - 71.
”வர வர மனுஷங்களைக் கண்டாலே ஒரே வெறுப்பா இருக்கு. யாரையுமே என்னால் டைஜெஸ்ட் பண்ண முடியலே..”. அலுத்துக் கொண்ட   நண்பர் பரந்தாமனைப் பரிவுடன் நோக்கினார் சாத்வீகன். கடைக்குப் போகிற வழியில் சந்தித்தார் அவரை. பார்த்ததுமே அவர் ஆரம்பித்து தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லி விசனப்பட்டார்.
“சரி, எங்கே கிளம்பி இப்படி…?” – சாத்வீகன்.
“மார்க்கெட்டுக்குத்தான்!” என்றார் அவர். “காய் வாங்கணும்.”
“நல்லதாப் போச்சு. வாங்க, நானும் அந்த வழிதான்.”
மார்க்கெட்டுக்குள் நுழைந்தார்கள். முதல் பெரிய கடை.
”பாருங்க எத்தனை… விதவிதமா காய்கறிங்க அடுக்கியிருக்கிறாங்க.”
”ஆமாமா. எல்லாம் நாம் வாங்கத்தானே?”
”நமக்கே நமக்குத்தான். ஒண்ணொண்ணா பார்ப்போம். அதோ காலிஃப்ளவர்!”
”ஆஹா இது நல்ல டேஸ்டா இருக்கும். பக்குவமா பொரிச்சா சிக்கனை மிஞ்சிரும் சுவையில.”
”அப்ப இது சுவையான ரகம்னு சொல்றீங்க..அப்ப என்ன யோசனை? வாங்கிப் போடுங்க.”
வாங்கினார்.
”இதோ நாட்டு வெண்டைக்காய்!”
”கொஞ்சம் வழ வழ.. ஆனா மெமரிக்கு நல்லதாச்சே?”
”அப்ப அதையும் வாங்கிவிட வேண்டியதுதான்..   நாம பக்குவமா பழகிக்குவோம் அதனோட..”
பக்குவமா பழகிக்குவோமா? இவர் என்ன சொல்றார்? பரந்தாமனுக்குக் குழப்பம்
”வாழைக்காய் ஃப்ரஷா இருக்கு.”
”ஐயோ அது வாயு ஆச்சே? வேணாம்.”
”அப்ப கொஞ்சம் விலகி நின்னுக்குவோம்.”
விலகி நிற்கிறதா? யோசித்தபடியே பீன்ஸை அள்ளினார். “பவர் ஃபுட் ஆக்கும் இது. ஹெல்த்துக்கு நல்லது.”
”அப்ப சினேகிக்க வேண்டியதுதான்…”
சினேகிக்க….. இவர் என்ன வெஜிடபிள்களைச் சொல்றாரா மனுஷர்களைச் சொல்றாரா?
“என்ன பார்க்கறீங்க? மனுஷங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். காய்கறிக் கடையில் விதவிதமா காய் இருப்பது போலத்தான் உலகத்தில மனிதர்களும் விதவிதமாக... எல்லா காய்கறிகளையும் ஜீரணிக்க முடிவது போல எல்லா மனிதர்களையும் ஜீரணிக்க முடியும்.”
வியப்புடன் பார்க்க இவர் தொடர்ந்தார்.  ”ஒவ்வொரு காயும் ஒவ்வொரு மாதிரி. பிடித்தவற்றை விரும்பி வாங்குகிறோம். பிடிக்காத சிலதை சத்துக்காக சேர்த்துக் கொள்ளுகிறோம். சிலதை அதன் பிரத்தியேக சுவைக்காக சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது.  இங்கே நாம என்ன பண்றோம்? ஒவ்வொரு காயையும் தனித்தனியா பார்க்கிறோம். ஒன்று போல ஒன்றில்லைன்னு நல்லாவே தெரிந்துகொண்டு!.  இதனுடைய இயற்கை இது, அதனுடைய மாறாத தன்மை அதுன்னு புரிந்து ஏத்துக்கறோம்.  மனுஷர்களையும் அதேபோலப் பார்த்து ஏற்றுகொள்ள முடியும்.  நன்மை இருக்குன்னு நினைக்கிறப்ப கசக்கிற பாவைக்காயையும் வாங்கிக்கறோம் இல்லையா? இப்படியே சில கசப்பான மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்களேன்.  It may work.

It will,“ என்றார் பரந்தாமன் திருப்தி முகத்தில் பிரதிபலிக்க.
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது)
><><><

Monday, December 15, 2014

அவள் - 13.



79.
உன் பாரா முகமே
இன்னும் அகலாமல் நெஞ்சில் 
வியாபித்திருக்க,
பார்க்கிற முகத்தை எங்கே
பத்திரப் படுத்துவேன்?

80
மெல்ல இருள் பிரிகிறதா
அல்லது ஒளி விரிகிறதா 
புரியாது புலரும் பொழுது.
அழகு வெட்கம் அளிக்கிறதா
வெட்கம் அழகூட்டுகிறதா
அறியாது மலரும் முகம்.

81
உன் 
முகப் புத்தகத்தைப் படிக்க 
ஆரம்பித்தவன்
முதல் பக்கத்திலேயே
இருக்கிறேன் இன்னும்.

82
உன் போல் 
எனை நேசிக்க
முடியவில்லை
என்னாலும்
எந்நாளும்.

83
மனதை கிள்ளிப் போனாய்...
ஏன்
திரும்பிப் பார்க்க வேண்டும்?

84
மனமின்றி உன் பக்கத்தில் 
அமர்ந்திருக்கிறேன்
அது உன் கையில்.

><><><



Tuesday, December 2, 2014

விநாடிகள் வீணல்ல...


அன்புடன் ஒரு நிமிடம் - 70
”வாங்க சித்தப்பா!”
யாழினி வரவேற்க வீட்டினுள் நுழைந்த ராகவ், எட்டிப் பார்த்தார் கிஷோரின் அறையை.
ஓங்கி மேஜையில் குத்துவதும் சே! என்று தலையில் அடித்துக் கொள்வதுமாக. கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தான்
என்ன என்கிற மாதிரி இவளைப் பார்த்தார். இவள் தெரியலையே என தோள்களைக் குலுக்கினாள்.
இவரைப் பார்த்ததும் அவனே சொன்னான். “ரொம்ப ஸ்லோ இந்த கம்ப்யூட்டர். இதை வெச்சிட்டு நான் படற பாடு!”
மறுபடியும் தலைக்குக் கொண்டுபோன கையைத் தடுத்தார் ராகவ். “சொல்லு, என்ன ப்ராப்ளம்?”
”அதைத்தானே சொன்னேன்? மெதுவா வொர்க் பண்ணுது. க்ளிக் பண்ணினா ஒவ்வொரு சைட் வர லேட் ஆகுது. செம எரிச்சலா இருக்கு. ஒரு பேஜ் பார்த்துட்டு அடுத்ததுக்கு போனா உடனே திறக்க வேண்டாமா? ஒவ்வொரு சமயம் ரெண்டு, மூணு செகண்ட் அப்படியே உட்கார்ந்திட்டிருக்க வேண்டியிருக்கு. ஒரு மெயில் எழுதி பட்டுன்னு அனுப்ப முடியுதா?”
“அப்படியா நல்ல சந்தோஷமான சமாசாரமா இருக்கே? என்ன பண்ணினே? எப்படி நடந்தது?”
திகைத்துப் போய்க் கேட்டான். ”இதில சந்தோஷப்பட என்ன இருக்கு? நான் ரிப்பேர் பார்க்க வழி தேடிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா…”
Actually, இப்படியெல்லாம் இல்லையே என்னோட லேப் டாப்ன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேனாக்கும்… நான் சொல்ல வர்ற விஷயம் என்னான்னா பட் பட்னு ஸ்க்ரீன் ஓபன் ஆகிட்டிராமல் நிதானமா திறக்கிறது நாம அமைதியா, பரபரப்பில்லாம, டென்ஷன் ஆகாமல் வேலை பார்க்க உதவுது. படித்த, பார்த்த விஷயத்தை ஒரு கணம் ஆழ்ந்து உள் வாங்கிக்க வழி வகுக்குதுன்னு நான் நம்பறேன்.”
நேர் எதிராகச் சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் தொடர்ந்தார். “…அப்பப்ப க்ளிக் செய்து நிற்கிற அந்த ரெண்டு செகண்டில் மனசைத் திருப்பு. அந்த சூழ்நிலையை பார். இப்படி ஒரு உலகமே கண்முன் விரிகிற விஞ்ஞான விந்தையை நீ அனுபவிப்பதை உணர்.  ஓரத்தில் மலரும் விளம்பர ஓவியத்தை ரசி.  அவ்வப்போது கண்ணை ஜன்னலில் ஓடவிட்டு அதற்கு ஒரு தூரப் பார்வை கொடுப்பதும் நல்லதுதானே?. கண் மூடி ஒரு செகண்ட் ரெஸ்ட் கொடு. ஹாலில் யாழினி முணு முணுக்கும் பாட்டைக் கேள். நேற்று அவள் சொன்ன ஜோக்கை நினைவு கூர். சுற்றிலும் பார். ஒரு முறை இழுத்து மூச்சை விடு. சோம்பல் முறி. இந்த மாதிரி சின்னச் சின்ன இண்டர்வெல்கள் நாம செய்திட்டிருக்கிற விஷயத்துக்கு விதம் விதமா பூட்டற ஃப்ரேம்களை அறிந்து கொண்டாயானால் இது உனக்கு ஒரு குறையே அல்ல.”
ரெண்டு செகண்டில் அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.    

 ('அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம்- நன்றி : கூகிள்)

Sunday, November 23, 2014

நல்லதா நாலு வார்த்தை... - 39


‘மிருதுவும் நடுநிலையும்
மிகத் தொலைவு வரும்.’
- Cervantes
(‘Fair and softly goes far.’)
<>

’உங்கள் தனித்திறமை என்பது 
கடவுள் உங்களுக்களித்த பரிசு
அதைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது 
கடவுளுக்கு நீங்கள் திரும்ப அளிக்கும் பரிசு.’
- Leo Buscaglia
(‘Your talent is God’s gift to you. What you do
with it is your gift back to God.’)

<>

‘அனேக முறை வருத்தப்பட்டிருக்கிறேன்
பேசிவிட்டேனே என்று,
ஒரு போதும் இல்லை 
மௌனமாயிருந்ததற்காக.’
- Publilius Syrus
(‘I often regret that I have spoken;
never that I have been silent.’)
<>

‘நான் யார் இல்லையோ 
அதற்காக நேசிக்கப்படுவதைவிட
நான் யாரோ அதற்காக 
வெறுக்கப்படுவது பரவாயில்லை.’
- Kurt Cobain
(‘I’d rather be hated for who I am,
than loved for who I am not.’)
<>

‘ஒரு வருட சம்பாஷணையில் 
ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள 
முடிவதை விட
ஒரு மணி நேர விளையாட்டில் 
அதிகம் தெரிந்துகொள்ள முடியும்.’
- Plato
(‘You can discover more about a person in
an hour of play than in a year of conversation.’)
<>

’நம்மைப்பற்றிப் பேசும் 
பத்துப் பேரில் ஒன்பது பேர் 
மோசமாக எதையோ பேசுகிறார்கள்
நல்லதாக எதையோ பேசும் ஒருவரும் 
அதை பல நேரம் 
மோசமாகப் பேசுகிறார்.’
- Rivarol
(‘Out of ten people who talk about us, nine says
something bad, and often the one person who
says something good says it badly.’)
<>

’குழந்தைப் பருவத்தைக் 
கூடவே எடுத்துச் சென்றால்
ஒருபோதும் வயதாவதில்லை.’
- Tom Stoppard
(‘If you carry your childhood with you,
you never become older.’)

><><><
(படம்- நன்றி:கூகிள்)

Monday, November 17, 2014

தவிர்க்க முடிகிற...


அன்புடன் ஒரு நிமிடம் - 69
புதிதாகக் கட்டி முடித்திருந்த வீடு பொலிவோடு நின்றிருந்தது. இன்று கிரகப் பிரவேசம். வந்தவர்களை வரவேற்பதற்காக வாசலில் நின்று கொண்டிருந்தார் வாசு.
இரண்டு வருடமாக பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு. பெருமையும் திருப்தியும் மனதில் அலைமோதிற்று.
ஆயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள். 
உள்ளே ஹோமத்துக்கு வேண்டிய விஷயங்களை கவனித்து விட்டு ஏதோ கேட்க அவர் அருகில் வந்த ஜனனி வாசல் ஓரமாக கவிழ்த்து வைத்திருந்த அந்த சிறிய போர்டைக் கவனித்தாள். எடுத்துப் பார்க்க, ”Leave your foot wears and lenses here.” (செருப்புக்களையும் பூதக் கண்ணாடிகளையும் விட்டுச் செல்லுமிடம்.) என்றிருந்தது.
பூதக் கண்ணாடி? அவளுக்குப் புரியவில்லை.
“என்னங்க இது?”
அவள் கை நீட்டிய திசையைப் பார்த்தார். மெல்லிய புன்னகை.  “ஆமா, நான்தான் எழுதினேன், இங்கே வைக்கலாம்னு இருந்தேன்.”
“செருப்பு சரி. பூதக் கண்ணாடி? What do you mean by that?”
”  நீ எதை நினைக்கிறாயோ அதைத்தான். ஆமா. வர்றவங்க எல்லாருமே ஊன்றிப் பார்த்து ஆளுக்கொரு குறையை சொல்லி தலைக்கு நாலு சஜஷனும் கொடுக்கிறாங்க.  அந்த சிரமம் அவங்களுக்கு தேவையில்லேன்னு சொல்லத்தான் இந்த வாசகம்.”
”ஏன் அப்படி நினைக்கிறீங்க?”
”ஏன்னா ஏற்கெனவே நிறைய பிளான் எல்லாம் போட்டு அதிலே ஆயிரத்தெட்டு கேள்விகளும்  பிரசினைகளும் வந்து அதையெல்லாம் அப்பப்ப யோசிச்சு அலசி சமாளிச்சு ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகளை எடுத்து ஒரு பெரிய வேலையை செய்து முடிச்சிருக்கோம். நமக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ முடிஞ்சோ முடியாமலோ குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மைப் பொறுத்தவரை எட்டு வருஷமா இருபதுக்கு இருபது போர்ஷன்ல வாடகைக்கு இருந்து பட்ட கஷ்டத்துக்கு என்ன குறை இருந்தாலும் இது சொர்க்கம். அப்படியே ஏதும் குறை இருந்தாலும் அதில் எதையும் இப்ப சரி செய்யற நிலைமையும் அவசியமும் இல்லாத போது அதை சொல்றதனால அர்த்தமில்லாத விவாதங்கள்தான் உண்டாகும். அதைத்தான் தவிர்க்க நினைக்கிறேன். ஆக, இந்த மெனக்கிடல் வேண்டாம்னு நினைக்கிறேன். அதில நான் நிச்சயமா இருக்கேன். அதான் இந்த Leave your lenses here போர்டு.”
புன்னகை இழையோடிற்று அவள் முகத்தில். “இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராப் படலியா?”
”பட்டது. அதான் நானே அதை வேண்டாம்னு எடுத்து கவிழ்த்து வெச்சிட்டேன்.”
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><><
(படம் - நன்றி : கூகிள்)

Thursday, November 13, 2014

அவள் - 12...


72
யாரெல்லாமோ வந்து
கேட்கிறார்கள்
’என்ன ஆச்சு உனக்கு?’
கடைசியில் என் ’அவளை’
சந்தித்துவிட்டேன் என்று
சொல்லிவிடவா?

73
அன்பு வளையங்கள் கோர்த்த
அந்த மாலை
எத்தனை அழகு
உன் இதயத்துக்கு.

74.
பளிச்சென்ற உன்
பார்வையில் கூசி
பிரகாசித்துக் கொண்டிருந்த
மின்விளக்கு அணைந்துவிட்டது.
இருட்டு இன்னும்
காணாமல் போனது.

75
என்னையும் உன்னையும் சேர்த்து
அதிலிருந்து
என்னையும் உன்னையும்
கழித்தால்
எஞ்சுவதே நேசம்.

76
சிரிப்பாணியா வருதில்ல உனக்கு 
சில சமயம் என்னை 
நினைக்கும்போது?
அதுதான் நீ
அதுதான் நான்.

77. 
ரோஜாவின் இதழ்களினூடே
தேடி ஏமாந்தேன்
உன் அதரங்கள் போன்ற
மென்மையை.

78
அத்தனை துளிகளும்
உன்மேல்தான் விழுவேனென்று
அடம் பிடித்ததால்
அருவியாகிவிட்டது 
மழை.
<><><>

(படம் - நன்றி; கூகிள்)

Wednesday, November 5, 2014

வெற்றிகரமான விளக்கம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 68

“என்ன முயன்றாலும் புரிஞ்சுக்கவே முடியலே… ஒரு வார்த்தை. அதற்குள் அடுத்தடுத்து வரும் ஒரே எழுத்துக்கு உச்சரிப்பு மட்டும் இரண்டு விதமா இருக்கு!” அலுத்துக்கொண்டான் பரசு.

“ஓஹோ?” என்றார் வாசு.

“ஆனால் டாட், அந்த வார்த்தையிலேயே அடுத்தடுத்து வரும் இன்னொரு எழுத்து! அதுவோ ஒரே உச்சரிப்பில் வருது.”

“அதென்ன வார்த்தையோ?”

“ரெண்டு நிமிஷம் தர்றேன், நீங்களே கண்டுபிடியுங்க!”

இரண்டாவது நிமிஷம்….

“Failure!” என்றார் வாசு, ”நீயே சொல்.”

“Success!” என்றான் அவன். “பாருங்க அதில வர்ற அந்த C யை! முதல் C வருதே அது க் என்கிற மாதிரி வருது. அடுத்த  C-யோ, ஸ் என்கிற உச்சரிப்பில்! வேடிக்கையா இல்லை?”

“இல்லை!” என்றார், “ஆச்சரியமா இருக்கு. In fact, அர்த்தமுள்ளதா படுது.

“எப்படி? எப்படி?” பரசு முகத்தில் ஆவல்.

“வெற்றிக்கான வார்த்தை அல்லவா அது?அதனாலேயோ என்னவோ வெற்றிக்கான ஓர் வழி அப்படி அதிலே அமைஞ்சிருக்கு. அடுத்தடுத்து வந்தாலும் C- யின் உச்சரிப்பு மாறுபடுது. அதாவது எப்ப நம்மை மாத்திக்கணுமோ அப்ப நம்மை நாம் மாத்திக்கணும், அப்பதான் வெற்றியடைய முடியும்.”

“அட, விளக்கம் வெகு ஜோர்!” கை தட்டினான் பரசு. “ஆனால் அதே வார்த்தையில் வர்ற S என்கிறஎழுத்தைப் பாருங்க. அடுத்தடுத்து வந்தாலும் ஒரே உச்சரிப்பு தானே அதற்கு?”

“யோசிச்சுப்பார். அதுவும் வெற்றிக்கான இன்னொரு வழியைத்தானே சொல்லுது? எப்ப ஒன்றிச் செயல் படணுமோ அப்ப ஒன்றிச் செயல்படணும் என்கிற பாடத்தை!”

”Successful விளக்கம்தான்!”

(”அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது.)

(படம்- நன்றி: கூகிள்.)

Sunday, November 2, 2014

அவள் - 11

66
கவிதைகளுடன்
கைகோர்த்தபடி
பயணிக்கிறேன்
உன் நினைவுகளுடன்.

67
உயரம் தாண்டும் போட்டி
வைத்தால்
எவெரெஸ்டைத் தாண்டிவிடும்
உன் உன்னதம்!

68
நிலவோடு உன்னை
ஒப்பிடுவதை
நிறுத்திவிட்டேன்
நிலவை
க்ளோசப்பில் பார்த்து
ஏமாந்த பிறகு.

69
இரண்டில் ஓர் விரலைத் தொடு
என்கிறேன்.
நீ
எதைத் தொட்டாலும்
சரி என்கிறது
என் மனம்.

70
தினம் 12.01 க்கு
ஆரம்பிக்கிறது
உன் தினம்,
ஆம், உன் தினம் முடிந்த
அடுத்த வினாடி.

71
உன் சிரிப்பு
ஏற்படுத்தும் தகிப்பை
உன் பார்வையின்
குளுமை
தணிக்கிறது.

>>>0<<<
(படம்- நன்றி;கூகிள்)

Friday, October 31, 2014

நல்லதா நாலு வார்த்தை....38


மெதுவாகவே நட. 
உன்னிடம்தான் 
வந்து சேரவேண்டும் 
நீ.’
- Proverb
(‘Walk slowly. All you can ever 
come to is yourself.’)
<> 
எந்த இரு மனிதரும் 
படிப்பதில்லை
ஒரே புத்தகத்தை.'
- Edmund Wilson
(‘No two persons ever read 
the same book.’)
<> 
எதையும் அடைய மிக விரும்பும் முன்,
எத்தனை மகிழ்வுடன் இருக்கிறார் 
அதனை அடைந்தவர் தற்போது
என்பதை பார்க்க வேண்டும் கவனமாக.’
- La Rouchefoucauld
(‘Before strongly desiring anything we should look 
carefully into the happiness of its present owner.’)
<> 
சேவை செய்வதெப்படியென 
சென்று கண்டு கொண்டவர்களே 
நின்று மகிழ்வர் நிஜத்தில் 
என்றறிவேன் நான்.’
- Albert Schweitzer
(‘One thing I know: the ones among you 
who will be really happy are those who will 
have sought and found how to serve.’)
<> 
நம் அறியாமையின் எல்லையை 
அறிந்து கொள்ள மட்டுமே 
அளவற்ற அறிவு தேவைப்படுகிறது.’
- Thomas Sowell
(‘It takes considerable knowledge just 
to realize the extent of your own ignorance.’
<> 
வெற்றியின் இலக்கணம் சற்றே எளிது:
உங்களின் சிறந்ததைச் செய்திடுக,
உலகோர் விரும்பலாம் அதை.’ 
Sam Ewing
(‘Success has a simple formula: do your best, 
and people may like it.’)
<> 
விரும்பும் போதெல்லாம்
திரும்ப நினையுங்கள்,
இனிய நினைவுகள் ஒருபோதும்
இற்றுப் போவதில்லை.’
- Libbie Fudim
(‘Recall it as often as you wish, a 
happy memory never wears out.’)

>>>0<<<

(படம்- நன்றி; கூகிள்)