Tuesday, November 27, 2012

தனக்கே தெரிகிறபோது...


அன்புடன் ஒரு நிமிடம் - 21

தனக்கே தெரிகிறபோது...

வாசல் பக்கம் சென்று சென்று மீண்டது யமுனாவின் பார்வை. காலையில் லேட்டாகிவிட்டது என்று கோபத்தோடு ஆபீஸ் சென்ற வினோத் என்ன மூடில் வருகிறானோ?

காலையில் மகன் யுவனைப் பிடித்து விரட்டிக் கொண்டிருந்தான்.

என்ன அங்கே நாய்க்குட்டியோட விளையாடிக்கிட்டிருக்கே? கணக்குப் பாடம் எடுத்து போடக்கூடாதா?... அன்னிக்கு ஏதோ பாஸ்ட் பெர்ஃபக்ட் டென்ஸ் புரியலேன்னு சொன்னியே, வா, ரென் அன் மார்டினை எடுத்து அந்த சேப்டரை படிச்சு எக்ஸர்சைசைப் போட்டுப் பாரு முதல்ல... காலையில படிச்சாதானே மனசில நிற்கும்?...” அப்படி இப்படி அவனை செலுத்தியதில் அரைமணிக்கு மேல் காணாமல் போய்விட்டது. பாக்கி தினசரி விஷயங்களை அரக்கப் பரக்க முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாகக் கிளம்பினான். லேட்டு, லேட்டுதான் இன்னிக்கு!

ஆனால் என்ன ஆச்சரியம்! சிடுசிடு முகத்தை எதிர்பார்த்தவளுக்கு சிரித்த முகம் காட்சி தந்தது. உள்ளே நுழைந்த கணவன் முகத்தில் உற்சாகம் பொங்கி வழிந்தது.

தெரியுமா இன்னிக்கு ஆபீஸில? மேனேஜர் என்னை மட்டம் தட்டப் பார்த்தார். ஆனா நான் அவரை அவுட்விட் பண்ணிட்டேன்! Showed him his place!” என்று ஆரம்பித்தான்.

அப்படி என்னங்க பண்ணினார்?”

மத்தியானத்திலிருந்தே தேவையில்லாம என்னை ஒட்டிட்டிருந்தாரு. அடிக்கடி காபினுக்கு அழைத்து, என்ன வினோத், அந்த பாலன்ஸ் ஷீட் என்னாச்சு? போனவாரமே தொடங்கினீங்களே அந்த இண்டெரிம் ரிப்போர்ட் இன்னும் முடியலையாக்கும்? எனக்கு இந்த காஸ்ட் ரிடக்ஷன் ப்ரஜக்ஷனை போட்டுக் கொடுங்கன்னு வற்புறுத்த ஆரம்பிச்சார்.  பார்த்தேன். இது சரியில்லையே, இப்படியே விட்டால் நல்ல பிரிச்சி மேஞ்சிருவாரு நம்மை. அப்புறம் நம்ம திறமையோட வேல்யூ நமக்கே ஜீரோவாகப் படுமேன்னு சுதாரிச்கிக்கிட்டேன். சார், இத பாருங்க, எனக்கென்ன வேலை செய்யறதில இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? எல்லாம் இருக்கு. எல்லாம் அந்தந்த டைமில தான் முடியும்னு காட்டமா பதில்களை சொன்னேன். அவ்வளவுதான். அசந்து ரிட்ரீட் ஆயிட்டார். பின்னே நம்மகிட்டே நடக்குமா?”

அப்புறம் என்ன ஆச்சு?”

அப்புறம் என்ன, நான் நான்தான்னு புரிஞ்சிக்கிட்டாரு. மூணு மணிபோல இருக்கும். கிட்டே வந்தார். என்ன வினோத், ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கலையே? ஒரு சின்ன ரிக்வஸ்ட். எனக்கு இந்த ப்ரஜக்ஷனை இன்னிக்கு அனுப்பியாகணும். நீங்க நினைச்சா முடியும். நல்லாவே போடுவீங்களே? போட்டுக் கொடுத்தீங்கன்னா ரொம்பவும் அப்ரிஷியெட் பண்ணுவேன்னு முகத்தில புன்னகையோட சொன்னாரு. நானும் உடனே அதைப் போட்டுக் கொடுத்தேன். அதட்டாம வற்புறுத்தாம இப்படி சொல்ல வேண்டிய விதத்தில சொன்னால்தானே நானும் மனப்பூர்வமா மனம் ஒன்றி அதில ஈடுபட முடியும், ரிசல்டும் நல்லாயிருக்கும்?” என்று தன் சாமர்த்தியத்தையும் சமர்த்தையும் அவளிடம் சமர்ப்பித்தான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. மனதில் ஏதோ ஓட, வேறெங்கோ தாவிற்று பார்வை.

யமுனாவின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான் வினோத். மூலையில் மேஜையடியில் அமர்ந்து பாடம் படித்துக்  கொண்டிருந்த விகாஸ்!

காலையில் அவனை தான் அதட்டியதும் விரட்டியதும் நினைவுக்குள் விரிந்தது இவனுக்கு. அவனிடம் நானும் இப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் முனைப்பாக இறங்கியிருப்பானோ தன் படிப்பில்?’
<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)

Tuesday, November 20, 2012

நிமிடங்கள்...




ண்ணீரில் முகம் பார்க்க
நேரமிருக்கா  எறும்புக்கு?

தன் அழகை தான் ரசிக்க
மனசிருக்கா தாமரைக்கு?

தான் தொட்டதை தழுவிக்கொள்ள
தயங்கிடுதாகுதாணங்களில்ுமே மனம் தண்ணீரும்?

வான் விட்டதை தரைக்குத் தர
ஏன் என்கிறதா மழை?

எங்கிருந்தோ வீசும் தென்றல்  
இடைநிற்க யோசிக்குதா?

எழில்சொட்ட மலரும் பூக்கள்
எதையேனும் யாசிக்குதா

<<<>>>

Monday, November 12, 2012

காத்திருந்த காட்சி...



அன்புடன் ஒரு நிமிடம் - 20.  

காத்திருந்த காட்சி...

வாசலில் வந்து இறங்கியவரைப் பார்த்ததுமே அபிஜித்துக்கு வரப்போகும் காட்சியின்  டிரைலர் மனதில் தோன்றிவிட்டது. அப்பாஜி மாமா! சாத்வீகனின் நண்பர்.

ஆஹா! தாத்தா இப்போது பொங்கி வெடிக்கப் போகிறார்! இப்ப நாம இங்கே இருக்கணுமா வேண்டாமா? அவர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போவதைப் பார்க்கவேண்டுமா?

இளக்காரம் கலந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்தபடியே, வாங்க மாமா! என்று அழைத்துப் போனான் உள்ளே.

முன் கதை என்ன? சும்மா இருந்த சாத்வீகனிடம் இந்த அப்பாஜி ஒரு நாள் வந்து இத்தனை ஆற்றலை மடியில் கட்டிக்கொண்டு வீட்டுப் படியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே? அப்படி என்ன உங்களுக்கு வயதாகி விட்டது? அவனவன் எழுபதிலும் எண்பதிலும் என்னென்ன சாகசங்கள் பண்ணுகிறான்? அருமையான ஐடியா ஒண்ணு சொல்றேன். உங்களை மாதிரி ஒரு ஜீனியஸ் தான் அதை செய்ய முடியும். நீங்க செய்தா லாபம் அள்ளிக் கொண்டு வரும். என்று தொடங்கி வீட்டிலேயே ஒரே ஒரு உதவியாளரை வைத்து செய்ய முடிகிற ஒரு பிஸினஸ் ஏஜென்சி பற்றி சிலாகித்து சொன்னார்.

சாத்வீகன் அதை எடுத்து செய்ததில், போட்ட முதல் ரெண்டு லட்சம் நஷ்டம், மேற்கொண்டு ஒன்றரை கடன், அந்த உதவியாளர் ஏற்படுத்திய பிரசினைகள் என்று அவர் பட்ட பாடு சொல்லி முடியாது. ஒரு வழியாக அதற்கு மங்களம் பாடி மீள்வதற்குள் உன்னைப்பிடி என்னைப்பிடி என்றாகிவிட்டது.

ஐடியா கொடுத்த கையோடு டெல்லி சென்ற அப்பாஜி ஐந்து வருடத்துக்குப் பின் இப்போதுதான் இங்கே வருகிறார். காரசாரமாக அரங்கேறப் போகும் காட்சி இரண்டைக் காண தயாரானான். ஜகப்பிரசித்தி பெற்றதல்லவா சாத்வீகனின் சொல்லாடல்?

ஆயிற்று. அரை மணி நேரம், முக்கால் மணி என்று நேரம் ஓடியது. சாத்வீகன் அதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. ஒன்றுமே நடவாதது போல ஒடிக்கொண்டிருந்தது அவர்கள் சம்பாஷணை. முன்பு அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது போல சிரிப்பும் களிப்புமாக....

ஒரு வேளை அவராகக் கேட்கட்டும் என்று காத்திருக்கிறரோ?

சற்று நேரத்தில்... எப்படி நான் கொடுத்த ஐடியா? பிஸினஸ் நல்லாப் போகுதா?” என்று வந்தவரே தொடக்க வசனத்தையும் பேசி காட்சியை துவக்கி வைத்தார்.

அனல் இருக்கட்டும், ஒரு பெருமூச்சு கூட வெளிப்படவில்லை இவரிடமிருந்து!

ஓ அதுவா? நாலு வருஷம் நடத்தினேனே! தாங்க்யூ! என்று சொன்னாரே  பார்க்கலாம்!

சப்பென்று ஆகிவிட்டது இவனுக்கு.

அவர் அகன்றதும் இவரிடம் கேட்டான். என்ன தாத்தா இது! சும்மா இருந்த உங்களை எதுவோ பண்ண சொல்லி இத்தனை பாதிப்பை ஏற்படுத்தியிருக்காரு, அவர்கிட்ட எதையும் சொல்லாம தாங்க்ஸ் வேறே சொல்றீங்களே! என்று அலுத்துக் கொண்டான்.

உதட்டிலிருந்த புன்னகை மறையாமல் அவனைப் பார்த்து சொன்னார் சாத்வீகன்: அவர் ஒரு ஐடியா கொடுத்தார். அதை ஏற்று நாம செயல்பட்டோம். அது நல்லா வரவில்லை. அவரிடம் ஏன் அதை சொல்லி அவரை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டும்?”

யோசித்தான். புரிந்தது. தாத்தா எத்தனை பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கிறார்!

நீங்க ஒரு ஜெண்டில்மேன் தாத்தா! என்றான்.

ஜெண்டில்மேன்? அதெல்லாம் கிடையாது. மேன்! அவ்வளவுதான்!

(அமுதம் செப்டெம்பர் 2012 இதழில் எழுதியது)

<<<<>>>>