Tuesday, March 14, 2023

ஒரு நாள் போதுமா?


பாடலாசிரியரை முதலில் எழுத சொல்லிவிடுவார், அவர் தன் முழுத் திறமையையும் காட்ட வசதியாக. அப்புறம் பத்து நிமிடம் போல தனியே அமர்வார். சிட்டென்று மெட்டொன்று மொட்டவிழும். சிறந்த சொல் வடிவம் பெற்ற பாடல் தகுந்த இசை வடிவம் பெற்று விடும். வரிகளின் உணர்வு இசையில் நூறு சதம் வெளிப்பட, பாடல் சுலபமாக இதயம் தொடும்! பல சமயங்களில் அது கொடிகட்டி பறக்கும்!

அப்புறம் கேட்கணுமா, இவருக்கு பாடல் எழுதுவது என்றாலே பாடலாசிரியர்களுக்கு குஷிதான். இந்திப் படவுலகில் ரவி இந்த மாதிரி. இங்கே இவர்.
“பறவைகள் பலவிதம்…” (இருவர் உள்ளம்) மூன்று சரண மெட்டும் மூன்று விதம்.
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான உணர்வுடன் இசையாய்க் கொடுப்பதில் வல்லவர். சாரதாவில் வரும், “மெல்ல மெல்ல அருகில் வந்து..” பாடலும் சரி, ‘தாயைக் காத்த தனயனி’ன் “கட்டித் தங்கம் வெட்டி எடுத்து…” பாடலும் சரி ஒவ்வொரு வரியும் அதற்கான உணர்வைத் தரும் இசையில் உட்கார்ந்து இருக்கும்.
1963-இல் வெளியான தமிழ் படங்களில் பாதிக்குமேல் படங்களுக்கு இவர்தான் இசையமைத்திருந்தார். ரிகார்ட்! மற்றொரு ரிகார்ட், தமிழில் முதன் முதலில் ஒரு லட்சம் ரிகார்ட் வெளியானது இவரின் 'பணமா பாசமா' படப் பாடலுக்குத்தான்.
“ஒரு நாள் போதுமா?” இவர் இசையை ரசிக்க? இசை “மன்னவன் வந்தானடி!” என்று பாட? இவர் இசையழகைக் “காணாத கண்ணும் கண்ணல்ல…”
மூன்று கடலிலும் மூழ்கி முத்தெடுத்தவர்..நாட்டுப்புறப் பாடல் வேணுமா? இதோ: “மணப்பாறை மாடு கட்டி..” க்ளாஸிக் இசை? இதோ: “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை…” வெஸ்டர்ன்? இதோ: “உன்னை அறிந்தால்…”
சிறுவயதில் நாகர்கோவிலிருந்து பூதப்பாண்டி வரை ஏழுமைல் நடந்து சென்று இசை பயின்றவராயிற்றே!
“என்ன சொல்லி பாடுவேன்... எந்த வார்த்தை கூறுவேன்...?” என்று அவர் இசையில் ஒரு பாடல் இனிதாகத் தவழ்ந்து வரும், அதுபோல எந்தப் பாட்டை சொல்லி அவர் திறமையை சொல்ல?
"எண்ணிரண்டு பதினாறு வயது..." ”ஆயிரம் நிலவே வா…” "இரவுக்கு ஆயிரம் கண்கள்..” “தூங்காத கண்ணென்று ஒன்று..” என்று அவர் இசை “மழை பொழிந்து கொண்டே இருக்கும்…” ('குடும்பத்தலைவன்')
'கல்யாணி'க்கு ஒரு மகா பாடல் தந்தார் மகாதேவன்: “மன்னவன் வந்தானடி..” என்றால் 'ஆரபி'க்கு ஒரு “ஏரிக்கரையின் மேலே..”
இசையன்னைக்கு அவர் அணிவித்த ’சங்கராபரணம்!’ அதன் பெரும்பாலான பாடல்கள் அதற்கு முன்பு கச்சேரிகளில், இசைத்தட்டுகளில் கேட்ட கர்நாடக இசை பாடல்கள். ஆனால் அதே பாடல்களை 'சங்கராபரணத்தி'ல் கேட்டபோது... புதிய பாடல் போல ஜனரஞ்சகப்படுத்தி இன்னும் சுவையூட்டியிருந்தார்.
எங்கிருந்தோ அந்த ‘டவுன் பஸ்' பாடல் ஒலிக்கிறது… “சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி.. சேதி தெரியுமா?”
திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களின் பிறந்த நாள் இன்று...

Monday, March 13, 2023

என்ன ஒரு குரல்!

குரலில் ஒரு ஸ்டைல்! ஸ்டைலில் ஒரு குரல்!

பாடிய மொழிகளை அடுக்குவதைவிட, எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறார் என்று சொல்லிவிடலாம் சுருக்கமாக.
ஷ்ரேயா... அரே யார்! என்னமா ஒரு குரல்!
SHREYA GOSHAL... மார்ச் 12.
பிறந்தநாள்!
தன் சரிகமப.. வை முதலில் பாடி அவார்ட் வாங்க்கியது Zee TV -யின். 'சரிகமப' ரியலிடி ஷோவில். அந்தப் பட்டுக் குரல் இயக்குநர் Sanjay Leela Bhansali யின் காதில் பட்டு 'தேவதாஸ்' படத்தில் சேர்க்கப் பட்டு.. அந்த 'Bhaire Piyaa… ’Dola Re..’ உதடு குவித்துப் பாடிய பாடல்கள் நேஷனல் அவார்ட், ஃபில்ம்ஃபேர் அவார்ட், ஃபில்ம்ஃபேர் ஆர்.டி. பர்மன் அவார்ட் என்று அவார்டுகளைக் குவித்தன.


ஆல்பம் (கார்த்திக்ராஜா) படத்தில் தன் செல்லக் குரலில் 'செல்லமே செல்லம்...' என்று வந்தார் தமிழில். அப்புறம் எதையென்று சொல்ல? ' உன்னைவிட......'(ஒன்னை விட..?) என்று மத்திய ஸ்தாயியில் இழுப்பாரே கமலஹாசனுடன் 'விருமாண்டி'யில்? பிறகு பிதாமகனில் வீசிய 'இளங்காற்று..' ஆனால் எனக்குப் பிடித்த பாடல் என்னவோ "எனக்குப் பிடித்த பாடல்..."தான். ஜூலீ கணபதி'யில் ஜெய்ராம் காரை ஓட்டிக்கொண்டு மலைச் சரிவில் விரைகையில் டேஷ் போர்டில் ஒலிக்குமே அது! என்ன ஒரு நச் குரல்!அதற்கு முன் சில்லென்று ஒரு காதலில் சில்லென்று ஒரு பாடல்: 'முன்பே வா என் அன்பே வா...' (ரஹ்மான்). 'சின்னக் கண்ணிலே..' (தோனி - இளையராஜா) பாடலை வேறு யார் அத்தனை வீச்சுடன் பாட முடியும்!
அமிதாப் நடித்த Cheeni Kum படத்தில் (இளையராஜா) அந்த 'Jaane Do Na…' வை வளைத்து வளைத்து பாடும் லாவகமே தனி. நாலு வயசிலேயே சங்கீதம் படிக்க ஆரம்பிச்சவராச்சே?
இசையை தன் ஆக்ஸிஜன் என்னும் இவர் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்ட ஒரே பாடகர். பெங்காலி உட்பட எல்லா மொழி பாடலையும் உச்சரிப்பைக் குறிக்க உதவியாக இருக்கும் என்று இந்தியில் எழுதி பாடுவாராம்.

Wednesday, March 8, 2023

'அத்தனை அழகு உலகு!'


327 கி.மீ உயரத்தில் 27400 கி மீ வேகத்தில் அவர் பறந்த 108 நிமிடம் சிறந்த இடம் பெற்றுவிட்டது வரலாற்றில். ஏனெனில் விண்கலம் ஒன்றில் பூமி வலம் வந்த முதல் மனிதர் அவர்.

Yuri Gagarin... இன்று பிறந்தநாள்!
புறப்படுமுன் அவர் சொன்ன ‘Let’s Go!’, எதைத் தொடங்கு முன்னும் சொல்லும் சொல்லாக பிரபலமாகிவிட்டது.
எடையற்ற நிலையில் இயங்குவது கடினம். எல்லாமே ஆட்டமாடிக் செய்யப்பட்டு, கிரௌண்ட் கண்ட்ரோலும் கொடுக்கப்பட்டாலும் ஒரு எமெர்ஜென்ஸிக்கு அவரே இயக்க வழியும் கொடுக்கப்பட்டது.
பூமிக்குத் திரும்பியபோது... குறித்த இடத்துக்கு சற்றே அப்பால் (250 கி மீ) விண்ணுடையும் பாராசூட்டுமாக இவர் தரை இறங்கியதும் பார்த்துப் பதைத்து நின்ற ஒரு அம்மாவையும் பெண்ணையும் பார்த்து, "பயப்படாதீங்க, நான் உங்கள் நாட்டவன்தான்."
கண்டங்களின் கரைகளைக் கண்டவர் சொன்னது: "வளிமண்டலத்திலிருந்து ஒளிக் கதிர்கள் சிதற, அடிவானம் ஆரஞ்ச் வண்னத்தில் மின்ன, அது வானவில்லின் ஒவ்வொரு வண்ணமாக மாற, என்னவொரு வர்ணனைக்கடங்காத வண்ண அடுக்கு!"
'அத்தனை அழகு உலகு! அழித்து விடாதீர்கள்!' என்றொரு வேண்டுகோளும் வைத்தார், நம் கோளின் அழகைக் கண்டதும்.
ஆறு வருடத்துக்குப் பின் ஒரு மிக்5 விமானத்தை சோதனையோட்டம் பார்த்தபோது விபத்தில் பலியானார்...

<><><>

இதே மகளிர் தினத்தில்...


பொக்கிஷமாகப் பாதுகாத்த தன் 300 வருட ஆன்டீக் பீங்கான் பிளேட்டுக்கள்! கழுவும்போது வேலையாள் உடைத்துவிடுவதைப் பொறுக்க முடியவில்லை அந்தப் பெண்ணால். தானே செய்யவும் சிரமம். அதற்கொரு மெஷின் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும்! தேடினார். கிடைக்கவில்லை. நாமே ஒன்றைக் கண்டு பிடித்துவிட வேண்டியதுதான் என்று இறங்கினார். கணவர் கடன் வைத்துவிட்டு மரித்துவிட, கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயமும் நேரிட...

யோசித்தார். தண்ணீரின் அழுத்தத்தையே தேய்க்கிற கையாக்கினால் என்ன? செய்ய ஆரம்பித்தார். படிக்காத இவர் சொன்ன ஐடியாக்களை படித்த ஆண் உதவியாளர்கள் ஏற்கவில்லை, தாங்கள் தோற்கும் வரை!
உருவானது ஒரு உபயோகமான டிஷ் வாஷர்! உடனே பேடன்ட் வாங்கினார். சிகாகோவில் ஓர் கண்காட்சியில் போட்டிக்கு வைக்கப்பட்டிருந்த மெஷின்களில் அதுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உள்ளேயே ஒன்பது ஹோட்டல்கள் அதை உபயோகித்தன. முதல் பரிசை அனாயாசமாகத் தட்டிச் சென்றது.
அம்மாக்கள் அனேகருக்கு 'அப்பாடா!'வைத் தந்த அதை ஆக்கிய Josephine Cochrane பிறந்தது...
இதே மகளிர் தினத்தில்.

Tuesday, March 7, 2023

நம்பி யார் வந்தாலும்...


M. N. நம்பியார்! நம்பி யார் வந்தாலும் நன்றாகத் தன் பாத்திரத்தை நடித்துக் கொடுப்பவர்.

நம் பிரான் (Pran)! அதாவது யார் ஹீரோ என்றாலும் வில்லன் இவரே, ரொம்பப் படங்களுக்கு!
ஊட்டியில் படித்துக் கொண்டிருந்தவர் கலைத்தாய் நடிப்பாசையை ஊட்டிவிட நாடகக் குழுவில் சேர்ந்தார்.
ஹீரோவாக தொடங்கி, வில்லனாக மிரட்டி, குணசித்திரத்தில் கலக்கியவர்! 1000 படம் தாண்டிய அபூர்வ நடிகர்.
அதிக வேடம் ஒரே படத்தில்? அசைக்க முடியாத ரிகார்ட் வைத்திருக்கிறார். 'திகம்பர சாமியாரி'ல் பதினோரு வேடம்!
மிகவும் ஸ்டைலாக வந்தது, 'சிவந்த மண்'ணில். என்னவொரு காஸ்ட்யூம்!
மிகவும் சர்ப்ரைஸ் தந்ததை நம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. தள்ளாத வயதிலும் பழி மாறாமல் வெகுண்டெழுந்ததும் திடுக்கிடாதவர் யார்? அங்குலம் அங்குலமாக சேற்றில் அமிழ்ந்துவிடும்போது கைகள் துடிக்கும்!
வில்லனாகவே வருகிறாரே என்று வெம்பிய வேளையில் நம்பியார் ரொம்பவே நல்லவனாக (கிட்டத்தட்ட ஹீரோ!) வந்து அசத்தினார் 'சுபதினம்' படத்தில்! Carried the entire film on his shoulders!
அந்த ஷ உச்சரிப்பு இவருக்கு ஷரியான முத்திரை! Sean Connery யைப் போல!
இவருக்குள் ஒரு காமெடியன் உண்டு. அவ்வப்போது அவரை பார்க்கலாம். ‘மிஸ்ஸியம்மா’வில்… ‘அஞ்சல் பெட்டி 520’ இல் …
வேடம்தான் அசைவம். அவரோ சைவம். ஸ்டூடியோவோ வெளிப்புறப் படப்பிடிப்போ, உணவு மனைவி கையால் சமைத்ததுவே.
Marc 7 பிறந்தநாள்!