Monday, September 6, 2010

நுணுக்கம்





சிநேகிதரும் சக தொழிலதிபருமான பாலகுமாரைப் பார்க்கச் சென்ற சபேசனுக்கு ஒரே வியப்பு.

போன வாரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் உதவி .மானேஜர்களை அழைத்து, ''அந்த ராம் நகர் பிராஞ்சில் மார்கெட்டிங் ஃபிகர் ரொம்ப டவுனாகியிருக்கு, உடனே பார்த்து சரிப்படுத்துங்க!'' என்று பணித்ததைப் பார்த்திருந்தார்.
இன்று போயிருந்தபோது அவரது உதவி மானேஜர் ஒருவர் வந்து, ''சரி பண்ணிட்டோம் சார். ராம் நகர் பிராஞ்சில் 30 பர்சன்ட் ஆர்டர் அதிகரிச்சிருக்கு,'' என்று தெரிவித்தார்.

அவர் அகன்றதும் நண்பரைக் கேட்டார். ''என்னப்பா இது, உன் ஸ்டாஃப் பிரமாதம்! எனக்கும் இருக்கிறாங்களே! எந்தப் பிரசினைன்னாலும் உட்கார வெச்சு எப்படி எப்படி சரி பண்ணனும்னு லிஸ்டே போட்டுக் கொடுக்கிறேன். நடக்கலேன்னு தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கிறாங்க.''

''அதுதான் காரணம்!'' என்றார் பாலகுமார், ''பிரசினையைச் சரி பண்ணனும்னு சொன்னால் போதும். என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு அவங்களா யோசிச்சு சரி பண்ணிடுவாங்க. நாமே அப்படி செய் இப்படி செய்னு பொம்மை மாதிரி இயக்கினா செயல்பாடு ஜீரோ தான், தெரிஞ்சுக்க.''

('குமுதம்' 04-11-2009)