Friday, April 26, 2013

நல்லதா நாலு வார்த்தை ... 4



ற்றுக்கொளல் இல்லாத
கற்பனை,
காலின்றி
சிறகிருப்பதைப்போல.
 _ Joseph Joubert

(‘He who has imagination without learning
has wings but no feet.’)

* 
ரு வார்த்தை, ஒரு புன்னகை
உடனே மாறிடுவார்
கையருகு புதியவர் 
ருசிகர நண்பராக....
பகட்டிலும் பயத்திலும்
மறுக்கிறோம் நமக்கே
மனம் வருடும் சினேகங்களை.
 -D.C.Peattie.

(‘A word, a smile and the stranger at your elbow may become
an interesting friend. All through life we deny ourselves stimulating
fellowship because we are too proud or too afraid to unbend.’)

*  
ன்னத விஷயங்களை
உன்னிடமிருந்து
கோரத் தயங்காதே
கனவிலும் நினைத்திராத
உனது சக்திகள்
ஓடிவரும் உன்
உதவிக்கு!
 - Orison Swett Marden

(‘Do not be afraid to demand great things of yourself. Powers which
you never dreamed you possessed will leap to your assistance.’)

 * 
'தேர்ந்த நல் விஷயமாயினும்
அதன்
தேடலில் தேவை
அமைதியும் நிதானமும்!'
-Cicero

('The pursuit, even of the best things,
ought to be calm and tranquil.')

 * 
றிவுடனே வளர்கிறது
ஐயம்.
 - Goethe

(‘Doubt grows with knowledge.’)

 * 
'விரும்பாத நல்
விஷயமொன்று  
திடமாகத்
தினம் செய்வதென்று
தீர்மானியுங்கள்.
வலியின்றி கடமையாற்றும்
வலிமை பெற
வழி அஃதன்றோ?
- Mark Twain

(‘Make it a point to do something everyday that you don’t 
want to do. This is the golden rule for acquiring the habit 
of doing your duty without pain.’)

<<>> 

Monday, April 22, 2013

இரண்டே நாளில்...




அன்புடன் ஒரு நிமிடம் 31  

இரண்டே நாளில்... 


ராகவ் அதைக் கேட்டு, வேறே எல்லாவற்றையும் விடுங்க, சிரிப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை கிஷோர். வேறு யாராவதாக இருந்தால் தன்னை எள்ளி நகையாடுகிறரோ என்றுகூட நினைத்திருப்பான். அவனே மிகக் கவலையில் அல்லவா வந்திருந்தான்?
பேச்சு இப்படி ஆரம்பித்தது.

என்ன கிஷோர் மூட் அவுட்டா இருக்கே?”

அதை ஏன்...? காலையிலேர்ந்து பலத்த சண்டை.

யாழினியோடு என்று அவன் சொல்லவில்லை. சொல்லாமலே தெரிவது அது.

நீ என்ன பண்ணினே?” அவன் முறைப்பைப் பார்த்து, யாழினி என்ன பண்ணினாள்?”

அப்படி சரியாக் கேளுங்க,” என்று தொடங்கி நடந்தவற்றை ஆதியோடந்தமாக விவரித்தான். ...காலையிலே பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை. இன்னும் நிற்கலே. பேசாம கிளம்பி வந்துட்டேன்.

அதாவது பேசிட்டு கிளம்பி வந்துட்டே?”

ஆமா. பேசிட்டு கிளம்பி வந்துட்டேன்.

கோபமா அவளை முறைச்சிட்டு?”

கோபமா அவளை முறைச்சிட்டு!

சரி, சொல்லு.

இந்த மாசம் இது நாலாவது சண்டை! வாரம் தவறாம ஒண்ணு முளைக்குது. சில வாரம் ஒண்ணுக்கு ரெண்டா...  ஆ,ஊன்னா பத்திக்குது.

உர்ருன்னு முகத்தை வெச்சுக்கறா. அல்லது நீ வெச்சுக்கறே?”

ஏதோ ஒண்ணு! ஒரு தடவை இப்படி நடந்தா சமாதானமாக ரெண்டு நாளாகுது. மாசம் பத்து நாள் இதிலே போயிடுது. மீதி நேரத்திலேதான் நான் ஆபீஸ் வேலை, வீட்டு விஷயம் எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. சே, என் வாழ்க்கை நகர்ற தினுசைப் பாருங்க! டோட்டல் வேஸ்ட்! கொஞ்சமும் நல்லாயில்லே, அவள் இப்படி சண்டை பிடிக்கிறது...

எத்தனை நாளா இப்படி நடக்குது?”

எத்தனை வருஷமான்னு கேளுங்க.

அவன் அப்படி சொல்ல, அப்பதான் அவர் சிரித்துத் தொலைத்தது.

என்ன மாமா, கேக்கிறதையெல்லாம் கேட்டிட்டு சிரிக்கிறீங்களாக்கும்?”

அவர் எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.

அது!என்றான். அப்படி நல்ல யோசிச்சு ஒரு வழி சொல்லுங்க, இந்த சண்டைகளை நிறுத்த!

நான் இப்ப யோசிக்கிறது உங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கிறதுண்ணுதான்.

கிஃப்ட்?”

யெஸ். இத்தனை தூரம் பரஸ்பர நம்பிக்கை கொண்ட தம்பதிக்கு ஏதாவது கொடுக்கணுமே நான்?”

முறைத்தான். அது ஒண்ணுதான் பாக்கி!

நோ. நீ சொன்னது எதை காட்டுதுன்னா நீங்க ஒருத்தர் மேலே ஒருத்தர் வெச்சிருக்கிற அபார நம்பிக்கையைத்தான்! சரியா ரெண்டு அல்லது மூணு நாளில் தீர்ந்து போகுது, அதுக்கு மேல் அது நீடிக்காதுங்கிற நிச்சயம்தான் இப்படி அடிக்கடி சண்டை போட வைக்குது. அந்த நிச்சயத்தைத் தருகிற உள் மதிப்பும் பிரியமும் உனக்கு அவள் மேலும் அவளுக்கு உன் மேலும் முழுசா இருக்கு. அப்புறம் என்ன?”

சற்றே துணுக்குற்றான். யோசித்தான். அப்படியும் இருக்குமோ? சரி அப்ப சண்டைன்னு ஒண்ணு ஏன் வருது இன் த ஃபர்ஸ்ட் பிளேஸ்?”

எல்லா அன்புள்ள மனுஷங்களுக்கிடையேயும் வர்ற மாதிரிதான்! அவள் எப்படி எப்படி இருக்கணும், எப்படி எப்படி நடந்துக்கணும்னு உனக்கு ஆயிரம் ஐடியா இருக்கு. அதே போல அவளுக்கும்!  அதான் சண்டையைக் கிளப்புது.  இது நடக்கிறது மேல் மனசில.  அடி மனசில அவள் அவளாகாவே இருக்கிறதும் அதுக்கு நீ உதவறதும்தான் உண்மையிலேயே உனக்குப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் அதுவே. அதுதான் அந்த சண்டையைத் தோற்கடிக்கிறது. உங்களை நீங்களே ஜெயிக்க வைக்கிறது.   

அவன் முகத்தில் எழுந்த பரவசம் இருக்கிறதே...

('அமுதம்' ஜனவரி 2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

Thursday, April 18, 2013

நல்லதா நாலு வார்த்தை...




'முன்னேறிச் செல்லும் மனதுக்கு
முக்கியம் அதன் திசை.

-Joseph Joubert 
(‘The direction of the mind is more important
than its progress.’)

*
னிதர் மூவகை:
நகரவே நகராதவர்கள்.
நகர்த்த முடிகிறவர்கள்.
நகர்ந்து செயலாற்றுபவர்கள்.

- Benjamin Franklin
(‘All mankind is divided into three classes: those that
are immovable; those that are movable and those that move.’) 
  
 *
வாழும் உணர்வே
போதும் ஆனந்தம்.

- Emily Dickinson
 (‘The sense of living is joy enough.’)  

* 
முனைந்து ஆழ்ந்திடும்
இனிய நினைவுகள்போல்
கசப்பான எண்ணங்களைக்
களைந்திடஏதுமில்லை.

- Hans Selye 
(‘Nothing  erases unpleasant thoughts more effectively
than conscious concentration on pleasant ones.’)

* 
முதலில் தன்னோடு
கைகுலுக்கிக் கொள்வதே
ஒரு மனிதனின்
முதற் பொறுப்பு!

- Henry Winkler 
(‘A human being’s first responsibility is
to shake hands with himself.’)

* 
தி திறனுடன் வழங்கும்
ஆறுதல் வார்த்தைகள்,
மனிதன்
அறிந்து வந்திருக்கும்
ஆதி மருத்துவம்.’

- Louis Nizer
(‘Words of comfort, skillfully administered,
are the oldest therapy known to man.’)

<<>>

(படம்: நன்றி: கூகிள் )

Sunday, April 14, 2013

சந்திக்க வேண்டியவர்கள்...




அன்புடன் ஒரு நிமிடம் 30 

சந்திக்க வேண்டியவர்கள்...

ன்ன கதிரேசன், ரெண்டு வாரமா ஆளையே காணோம் இந்தப் பக்கம்?” இயல்பாகக் கேட்டார் சாத்வீகன்.
ஆமா. கொஞ்சம் பிஸி. பையன் எஞ்சினீயரிங் முடிச்சிட்டு வந்திருந்தான். எம்.என்.ஸி. கம்பெனியில் நாற்பதுக்கு வேலை காம்பஸிலேயே கிடைச்சிட்டது. அதான் அவனுக்கு வேண்டிய எல்லா திங்க்ஸையும் ரெடி பண்றது, அது இதுன்னு நாள் ஓடிட்டது. முந்தாநாள்தான் கிளம்பினான் சென்னைக்கு...
அப்படியா? எத்தனை நாள் இருந்தான் ஊரில்?”
பத்தே நாள்தான்.
அப்ப நேரம் கொஞ்சம் நெருக்கடியாய்த்தான் இருந்திருக்கும்.... திலக் நகர்ல அவனோட பெரியப்பா இருக்கிறாரே, அவர்தானே ஸ்கூல் ஸ்கூலா அலைஞ்சு அவனுக்கு அட்மிஷன் வாங்கித் தந்தவர்? அங்கே போயிருந்திருப்பீங்க, அதில ஒரு நாள் போயிடும்!
இல்லே அங்கே போகலே. அவர்கூட ஊரில இல்லேன்னு இன்னிக்கு கேள்விப்பட்டேன்.
ஓ அப்படியா? அப்ப ஒரு நாள் மிச்சம்தான். அப்புறம் உன் தம்பி புதுசா வீடு கட்டி தனியா இருக்கிறானே, அங்கே ஒரு நாள்! சின்ன வயசில இவனை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அலைவானே?”
அங்கேயும் போகலே, அடிக்கிற வெயிலைப் பார்த்தா எப்படி புதுசா வேலையில ஜாயின் பண்ணக் கிளம்பறவனை அலைய வைக்கிறது? உடம்புக்கு ஏதாவது வந்துட்டா?”
அதுவும் சரிதான். எனக்கு அது தோணலே பாரு. ஆனா உன் ஃபிரண்ட் வேதசாலம் வீட்டுக்கு ரெண்டு நாள் ஒதுக்கியாகணுமே? எத்தனை சொல்லியிருக்கே அவனைப் பத்தி? அப்படி ஒரு பழக்கம் உன் குடும்பத்தோடு! ஏன், உன் பையன் காலேஜ் ஃபீஸ் கட்ட அவன்தானே அடிக்கடி பர்சை நீட்டுவான்?”
மறப்பேனா? போன மாசமே அவனைப் பார்த்து விவரமெல்லாம் சொல்லி அன்னிக்குப் பூராவும் அவனோடு பழைய நாட்களை எல்லாம் அசைபோட்டு... இப்ப இருக்கிற பத்து நாளில இவனை எதுக்கு அங்கேயெல்லாம் அழைச்சுட்டு போயிட்டுன்னு தான் போகலே.
ஓ இவனை அழைச்சிட்டுப் போகலியா?...  இவன் லீவில் ஊருக்கு வரும்போதெல்லாம் முறுக்கு அதிரசம்னு ஆசையோடு பண்ணிக்கொண்டு வருவாளே உன் சித்தி, அவள் இங்கே எங்கேயோ புது நகர் பக்கம்தானே...உன் பையனையாவது அனுப்பி வெச்சிருப்பியே அவ வீட்டுக்கு?”
அனுப்பலாம்னு தான் இருந்தேன், ஆனா அன்னிக்கு மழை வந்து கெடுத்திட்டது.
ஓ அந்த வெள்ளிக் கிழமையை சொல்றியா? இருக்கட்டும். காலேஜ் எது, பிராஞ்ச் எதுன்னு சரியா தேர்ந்தெடுக்க நிறைய விவரம் சேகரிச்சு ரொம்ப உதவியா இருந்தார்னு சொல்லுவியே உன் ஆபீஸ் சூபர்வைசர் ராமலிங்கம், அவரிடம்...
அதெப்படி மறப்பேன்? இவனை ரயில் ஏற்றி விட்டு அடுத்தாப்பல அங்கேதானே போனேன்? என் நன்றி உணர்வை அவர் ரொம்பவே பாராட்டினார்.
சரி. அப்புறம் உன் பெரியண்ணா, தம்பி, மாமா, தங்கை இவங்கல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்ல, முப்பது கிலோ மீட்டருக்குள்ளேதான், இல்லியா? ஒரு நாலு நாள் அதுக்கு ஒதுக்கியிருப்பியா?”
அதான் நான் இப்ப ஃப்ரீ ஆயிட்டேனே! இந்த வாரம் அதுக்கு ஒதுக்கிட்டேன்.... என்ன ஏதோ யோசிக்கறீங்க? சும்மா சொல்லுங்க.
ஒரு சின்ன சந்தேகம். உன் பையன் படிச்சு ஒரு நல்ல வேலை கிடைச்சு போயிருக்கிறான். அவன் பொறுப்போடு அந்த வேலையை செய்து கவனமா முன்னேறணும்னு நினைக்கிறே இல்லே?
நிச்சயமா!
அப்படியானால் இந்த சந்தர்ப்பத்தில் நீ அவனையும் இவர்களிடம் அழைச்சிட்டுப் போயிருக்கணும் இல்லையா? தான் இன்றைக்கு அமர்ந்திருக்கும் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னால் எத்தனை பேருடைய உதவியும் சிரமமும் இருந்திருக்கின்றன என்று உணர்ந்தால் அவனுடைய பொறுப்புணர்வும் கவனமும் அதிகரிக்கும். முன்னேற்றமும் சந்தோஷமும் ஏன் திருப்தியும் எளிதில் வசப்படும்... அதோடு தன் உறவினர், குடும்ப நண்பர்களுடன் அவனுக்கு வலுவானதொரு தொடர்பும் ஈடுபாடும் உண்டாகும் இல்லையா?”
சரியா சொன்னீங்க! அடுத்த விடுமுறை நாளிலேயே அவனை வரவழைத்து இதை செஞ்சிடறேன்!       

('அமுதம்' ஜனவரி 2013 இதழில் வெளியானது) 
<<<>>>
(படம் - நன்றி: கூகிள்)

Monday, April 8, 2013

நல்லதா நாலு வார்த்தை...

    
நான்
பார்த்த அனைத்துமே
பார்க்காத அனைத்துக்குமாக
படைத்தவனை நம்பப்
படிப்பிக்கின்றது.’

-- Emerson

(‘All I have seen teaches me to trust
the Creator for all I have not seen.’)

* 
கொஞ்சம் நம்மோடு
கொணராமல் எங்கு தேடினும்
கிடைக்காது கவிதை.

Joseph Joubert.

(‘You will find poetry nowhere
unless you bring some of it with you.’)


 *
ழமான யோசனையும்
அபாரமான உழைப்புமின்றி
சாரமான விஷயமேதும்
சாதிக்கப் பட்டதில்லை.

- J.R.D.Tata

(‘Nothing worthwhile is ever achieved
without deep thought and hard work.’)


 *
விரைவில் புரிய
விழைகிறோம் ஈகை...
விரைவென்பது எத்தனை
விரைவில் தாமதமாகி
விடும் என்பதறியோம்.

-Emerson.

(‘You cannot do a kindness too soon,
for you never know how soon it will be too late.’)

* 
தேவையற்ற விசனத்திலும்
அர்த்தமற்ற எதிர்பார்ப்பிலும்
வினாடி கூட
வீணாக்க முடியாதபடி
வெகு சிறியது வாழ்க்கை.

-Dorathy Strange

(‘Life is too brief to waste even one moment
in useless regret or vain expectation.’)


 *
'இன்னும் தனிமையில் வாடும்
இன்னோர் இதயம் நாடும்
இதயம் எதுவும்
தனியே வாடுவதில்லை.

- Frances Ridley Havergal

(‘Seldom can the heart be lonely,
if it seeks a lonelier still.’)

<<<>>>

(படம்- நன்றி: கூகிள் )