Sunday, July 18, 2010

ஆனால் நானோ...

ன்பை நான் பார்த்தேன்,
அன்பு என்னைப் பார்க்கவில்லை.
பாசத்தை நான் பார்த்தேன்,
பாசம் என்னைப் பார்க்கவில்லை.
வாழ்க்கையை நான் பார்க்கிறேன்,
வாழ்க்கை என்னைப் பார்க்காத போதும்!


தரவில்லை, ஆனாலும் கண்களில் ஒளி!
அடுத்த வேளை சோறில்லை,
ஆனாலும் முகத்தில் நம்பிக்கை!

''இல்லீங்க,
அவங்க சிரிக்கச் சொன்னாங்க
போட்டோவுக்கு!''

Tuesday, July 6, 2010

தெளிதல்

வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது அவர் வீட்டுக்குத் தான்.

அப்படித்தான் அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாக சிக்கல் பிரித்துக் கொண்டிருந்தார் மாமா. என்னைக் கண்டதும், ''வாம்மா சக்தி, விஷயம் இல்லாம வரமாட்டியே?'' என்று சிரித்தார்.

''எல்லாம் என் அப்பா விஷயமாத்தான் மாமா. எப்பவும் டென்ஷனாவே இருக்கார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார். எல்லார் மேலேயும் அனாவசியத்துக்குக் கோபம். எப்படி அவரை சமாதானம் பண்றதுன்னே தெரியலே. ஏதாவது வழி சொல்லுங்களேன்!''

''முன்னேயெல்லாம் ரொம்ப நிதானமா இருப்பாரேம்மா? ஆபீசில் ஏதாவது பிரச்னையோ?'' என்று என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே நூல்கண்டின் சிக்கலை விடுவிக்க ஆரம்பித்தார் அவர். பொறுமையாக நூலின் முனையைத் தேடியெடுத்து ஒவ்வொரு முடிச்சாக பிரித்தெடுக்கலானார்.

''எதுக்கு மாமா இவ்ளோ சிரமப்படறீங்க? இது சாதா நூல் தானே? சிக்கல் பகுதியைக் கட் பண்ணி எடுத்திட்டு மீதியை உபயோகிச்சுக்கலாமே?'' என்றேன்.

''அசடு, அசடு..! நூலை உபயோகிக்கவா இவ்வளவு மெனக்கெட்டு சிக்கலைப் பிரிச்சிட்டிருக்கேன்? இது என் தினசரி பிராக்டிஸ்மா! வேணும்னே நூல்கண்டில சிக்கல் பண்ணிக் கொடுத்துட்டுப் போவா என் பொண்ணு. தினமும் இப்படிச் சிக்கலைப் பிரிச்செடுக்கிறதில் ஒரு அரை மணி நேரமாவது செலவழிப்பேன். அதுல என் மனசை ஒருமுகப் படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும் தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது. சரி, அது போகட்டும்... உன் பிரச்னைக்கு என் ஆலோசனை என்னன்னா...''

''எனக்குத் தெரிஞ்சிடுச்சு! தாங்க்ஸ் அங்கிள்! நான் வரேன்,'' விரைந்தேன் வீட்டுக்கு.

(விகடன் 09-04-06 இதழில் வெளியானது)

Friday, July 2, 2010

அவன் மட்டும்...


சி வருடங்களுக்கு முன்
நான் அவனை
நேருக்கு நேர் சந்தித்தேன்.
அவன் மட்டும் ஒத்துழைத்தால்
நிறைய நிறைய
சாதிக்க முடியும் என்று
தெரிந்து கொண்டேன்.
ஆனால்
அவனிடம் கொஞ்சம்
அறியாமை இருந்தது,
அறிய வைத்தேன்.
சோம்பேறித்தனம் இருந்தது,
சுறுசுறுப்பை ஊட்டினேன்.
அகந்தை இருந்தது,
அகற்றினேன்.
மெல்ல மெல்ல அவன் வளர்ந்து
ஆளானான்.
என்னை ஆளாக்கினான்.
சொல்லிக் கொண்டேன் நன்றி
அவனாகிய எனக்கு!