Tuesday, July 6, 2010

தெளிதல்

வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது அவர் வீட்டுக்குத் தான்.

அப்படித்தான் அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாக சிக்கல் பிரித்துக் கொண்டிருந்தார் மாமா. என்னைக் கண்டதும், ''வாம்மா சக்தி, விஷயம் இல்லாம வரமாட்டியே?'' என்று சிரித்தார்.

''எல்லாம் என் அப்பா விஷயமாத்தான் மாமா. எப்பவும் டென்ஷனாவே இருக்கார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார். எல்லார் மேலேயும் அனாவசியத்துக்குக் கோபம். எப்படி அவரை சமாதானம் பண்றதுன்னே தெரியலே. ஏதாவது வழி சொல்லுங்களேன்!''

''முன்னேயெல்லாம் ரொம்ப நிதானமா இருப்பாரேம்மா? ஆபீசில் ஏதாவது பிரச்னையோ?'' என்று என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே நூல்கண்டின் சிக்கலை விடுவிக்க ஆரம்பித்தார் அவர். பொறுமையாக நூலின் முனையைத் தேடியெடுத்து ஒவ்வொரு முடிச்சாக பிரித்தெடுக்கலானார்.

''எதுக்கு மாமா இவ்ளோ சிரமப்படறீங்க? இது சாதா நூல் தானே? சிக்கல் பகுதியைக் கட் பண்ணி எடுத்திட்டு மீதியை உபயோகிச்சுக்கலாமே?'' என்றேன்.

''அசடு, அசடு..! நூலை உபயோகிக்கவா இவ்வளவு மெனக்கெட்டு சிக்கலைப் பிரிச்சிட்டிருக்கேன்? இது என் தினசரி பிராக்டிஸ்மா! வேணும்னே நூல்கண்டில சிக்கல் பண்ணிக் கொடுத்துட்டுப் போவா என் பொண்ணு. தினமும் இப்படிச் சிக்கலைப் பிரிச்செடுக்கிறதில் ஒரு அரை மணி நேரமாவது செலவழிப்பேன். அதுல என் மனசை ஒருமுகப் படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும் தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது. சரி, அது போகட்டும்... உன் பிரச்னைக்கு என் ஆலோசனை என்னன்னா...''

''எனக்குத் தெரிஞ்சிடுச்சு! தாங்க்ஸ் அங்கிள்! நான் வரேன்,'' விரைந்தேன் வீட்டுக்கு.

(விகடன் 09-04-06 இதழில் வெளியானது)

13 comments:

R.Gopi said...

வாழ்க்கையின் நூல்கண்டில் சிக்கலை எடுக்க சொல்லி தந்த அருமையான கதை...

நானும் இனிமே, ஒரு சின்ன நூல்கண்டு பிரிக்க ட்ரை பண்றேன்...

உயிரோடை said...

வாழ்த்துகள்

ரிஷபன் said...

என் மனசை ஒருமுகப் படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும் தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது.
வாழ்க்கைப் பாடம்! நன்றி ஜனா ஸார்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மிகவும் ரசித்தேன்

Chitra said...

விகடனில் வெளி வந்த இந்த அருமையான கதைக்காக, பாராட்டுக்கள்!

http://rkguru.blogspot.com/ said...

வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

சிறந்ததொரு வாழ்க்கைப் பாடம். பகிர்வுக்கு நன்றி சார்.

அண்ணாமலை..!! said...

நல்ல சிந்தனையுள்ள கதை..
எங்கும் பரவட்டும் நல்லவைகள்!

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு கதையும் அது உணர்த்தும் பாடமும்.

Rekha raghavan said...

வாழ்க்கைச் சிக்கலில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை ஒரு நூல் கண்டை வைத்து விளக்கிய விதம் அருமை.


ரேகா ராகவன்.
(now from Chicago)

கே. பி. ஜனா... said...

அன்புள்ள r.gopi, உயிரோடை, ரிஷபன். ஜெஸ்வந்தி, இராமசாமி கண்ணன், சித்ரா, r.k.guru ,வெ .நாகராஜ், பின்னோக்கி, ராகவன் உங்கள் பின்னூட்டங்களுக்கு என் நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு சின்ன நூல் கண்டு நம்மை சிறைப் படுத்தவில்லை,..செம்மைப் படுத்துகிறது..
கதை அருமை!!!

Bagavath Kumar.A.Rtn. said...

நல்ல யோசனை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!