Tuesday, June 20, 2017

அவள்... (கவிதைகள்)


411.
கானகத்து மரங்கள் இருளைப்
பொத்தி வைத்திருப்பது போல
மனதில் வைத்திருக்கிறேன் உன்னை.
><><

412
தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு.
><><

413.
மாயச்சிரிப்பு...
எனக்கு மட்டுமாக
நீ சிரிப்பது.
><><

414.
இரு கரைகளையும்
இணைக்கிறது பாலம் நம்
இரு மனங்களையும் 
இணைக்கிறது காலம்.
><><

415.
உன் நினவலைகளினின்றும் 
கரையேற முடியாமல்
கவிதையேறிற்று மனம்.
><><

416.
வேறொன்றும் வேண்டாமென
மனசு சொல்லவே
அருகில் நீ.
><><

417.
கடைக்கண் தாவும் விழி
கடப்பது நாளில் பத்து கி.மீ.
><><

418.
எப்படி இலைகள் சரியாக அசைந்தாடி
உன்னை வரவேற்கின்றன
பூங்காவில் நீ நுழைகையில்?
><><

 419.
விரைந்து சென்றுவிட்டாய்
வியந்து நிற்கவைத்துவிட்டு.
><><

420.
என் எண்ண நதியலைகள்
சங்கமிக்கிறது உன்
இதயக் கடலில்.

><><><

Friday, June 16, 2017

நல்லதா நாலு வார்த்தை.... 82


'மனிதனை கொஞ்சமும் 
குறைவாக நேசிக்கவில்லை நான்,
ஆனால் இயற்கையை அதிகமாக.
-Lord Byron
('I love not man the less, but Nature more.')
<>

'செல்வம் என்பது வாழ்க்கையை
முழுவதுமாக அனுபவிக்க
முடிகிற திறமை.'
-Thoreau
('Wealth is the ability to fully experience life.')
<>

’உங்கள் திறமைகளை மறைக்காதீர். 
பயன்படவே அவை படைக்கப்பட்டன. 
நிழலில் சூரியக் கடிகாரம் என்ன பயன்?’
- Benjamin Franklin
('Hide not your talents. They were for use made
What's a sundial in the shade?')
<>

'நிலவை நோக்கிப் பாய்ந்திடு;
தவறவிடினும் இருந்திடுவாய்
தாரகைகளின் மத்தியில்.'
- Les Brown
('Shoot for the moon and if you miss
you will still be among the stars.')
<>

’என் வாழ்க்கை நெடுகிலும்
இயற்கையின் புதிய காட்சிகள் 
என்னை ஒரு குழந்தை போல 
குதூகலிக்க வைத்தன.’
- Marie Curie
(’All my life through, the new sights
of nature made me rejoice like a child.’)
<>
’பேசுவதற்கு இரு மடங்கு கேட்கலாம்
என்பதற்காகவே நமக்கு 
காதுகள் இரண்டும் வாய் ஒன்றும்.’
- Epictetus
('We have two ears and one mouth so that
we can listen twice as much as we speak.')
<>

'படிப்பதற்கு எளிதாகவிருப்பது
எழுதுவதற்கு மிக கஷ்டமானது.’
-Nathaniel Hawthorne
('Easy reading is damn hard writing')
<>

'இன்றைய அறிவியல் 
நாளைய தொழில்நுட்பம்.’
-Edward Teller
('The science of today is the technology of tomorrow.')
<>

'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே, 
அறிகிறேன் அதுவேதான் என்று.'
- Oscar Wilde
('When I was young I thought that money
was the most important thing in my life;
now that I am old I know that it is.')
<>

'காதலின் உணவு
இசையென்றானால் அதை
வாசித்துக்கொண்டேயிரு.'
- William Shakespeare
('If music be the food of love, play on.')

><><><