Tuesday, July 16, 2013

நல்லதா நாலு வார்த்தை... 12


வாழ்வினூடே

வழி நடக்காதீர்,

வாழ்வினூடே

வளர்ந்திடுவீர்!

-Eric Butterworth

(‘Don’t go through life, grow through life.’)

<>

விரும்புவதை செய்வதல்ல,

செய்ய வேண்டியதை

விரும்புவதே

அளிக்கிறது வாழ்க்கைக்கு

அளவிலா பேறு.

-Goethe

(‘It is not doing the thing we like to do, but liking

the thing we have to do, that makes life blessed.’)

<>

எதிலும் கவலை கொள்கிறவருக்கு

என்ன ஒரு சௌகரியம் எனில்,

நினைத்தது சரிதானென்ற

நிரூபணமோ,

சந்தோஷ அதிர்ச்சியோ

கிடைத்தபடியே இருக்கும்!

- George Will

(‘The nice part about being a pessimist is that you are constantly

being either proven right or pleasantly surprised.’)

<>

அனைத்தையும்

சரிப்படுத்துவதல்ல நம் வேலை;

அனைத்தையும்

சரியாகப் பார்ப்பது!

- Eric Butterworth

(‘Our job is not to set things right but to see them right.’)

<>


கண்டுகொண்ட அழகு

தொலைவதில்லை,

கடவுளின் வண்ணங்கள்  

மறைவதில்லை.

- John Greenleaf Whittier

(‘Beauty seen is never lost,

God’s colours all are fast.’)

<>

பொறுமையின்மை ஓர்

நற்குணம்,

அதை நாம் நம்மிடம்

பிரயோகிக்கும் வரையில்.

- Rod McKuen

(‘Impatience can be  a virtue, if you practise it on yourself.')

<>

உலகின் பொய்யர்களில்

மிக மோசம்,

சில சமயம், 

நம் பயங்களே.

-Rudyard Kipling

(‘Of all the liars in the world, sometimes

the worst are your own fears.’)

<<<<>>>>

(படம்- நன்றி: கூகிள்)

Wednesday, July 10, 2013

வீட்டுக்குள் வீடு


அன்புடன் ஒரு நிமிடம் 39

ப்ப எனக்கு மாத சம்பளம் போடறதாயிருக்கே கிஷோர்? ஒரு ஐயாயிரமாவது போட்டுக் கொடு.

எதுக்கு மாமா?”

உங்க சின்ன சின்ன பிரசினைகளை எல்லாம் தீர்த்து வைக்கறதுக்குத்தான்! என்றார் ராகவ்.

, புகார்ப் பட்டியல் நீட்டிவிட்டாளா யாழினி?”

ஒண்ணே ஒண்ணு!

என்ன அந்த ஒண்ணு?”

 “ஒண்ணுமில்லே, அஞ்சரை மணிக்கு ஆபீஸ் வேலை முடிஞ்சாலும் நீ வீட்டிலேயே இருக்கிறதில்லேங்கிறது அவள் குற்றச்சாட்டு!

அவ அபாண்டமா பொய் சொல்றா மாமா! நம்பாதீங்க.

அப்ப நீ என்ன சொல்றே?.

சொல்றதென்ன? நீங்களே வந்து பாருங்க. அஞ்சே முக்காலுக்கு நான் வீட்டில் ஆஜர். அப்புறம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர்றதே இல்லை.

அப்படீங்கறே?”

ஆமா. எப்ப வேணா எப்படி வேணா செக் பண்ணிக்கலாம் நீங்க!

ஆல்ரைட். நான் கன்ஃபர்ம் பண்ணி விட்டுப் பேசறேன்.

அடுத்தவாரம் ஆரம்பித்தார்.  திங்கள்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு லேண்ட் லைனில் கூப்பிட்டார்.

வந்துட்டேன் மாமா. பத்து நிமிஷம் ஆச்சு. காபி சாப்பிட்டுட்டு இப்பதான் நெட்ல உட்கார்ந்தேனாக்கும். ஓகே தானே?”

சரிப்பா.

செவ்வாய்க் கிழமை ஏழு மணிக்கு அழைத்தார். அவனே எடுத்தான்.

ஆஜர்.

எப்ப வந்தே? என்ன பண்றே?”

சொன்னான். அதே அஞ்சே முக்கால். ஃபிரண்ட் திலீப் வந்தான், பேசிட்டிருக்கேன். யாழினி இதோ காபி எடுத்து வந்திட்டிருக்கா. கூப்பிடவா? அவளையே கேட்கிறீங்களா?”

புதன் எட்டு மணிக்கு ஒரு திடீர் விசிட் அடித்தார். வீட்டில்தான் இருந்தான் ஸ்டார் மூவீஸ் சேனலில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டு.

வியாழன் ஒன்பதே காலுக்கு... ஒரு சிறுகதை எழுதிட்டிருக்கேன், எழுதினவரை படிக்கிறேன், கேட்கிறீங்களா மாமா?”

வெள்ளி ஏழரைக்கும். உள்ளேதான் இருக்கிறாங்க, அப்பவே வந்துட்டார் மாமா. செல்போனில் யார்கிட்டேயோ பேசிக்கொண்டிருக்கிறார்,” என்றாள் கதவைத் திறந்த யாழினி.

பத்து நாளாக நினைத்தபோது போன், திடீர் விசிட் என்று மாற்றி மாற்றி பரீட்சித்த போதும் பையன் வீட்டிலேயேதான் அகப்பட்டான்.

தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் மாமா நீங்க. என்று சிரித்தான் அடுத்து அவரை சந்தித்த போது. யாழினிக்கு புத்தி சொல்லுங்க. எனக்கு நம்பிக்கையில்லை கேட்பாள்னு!

ஆமா, புத்தி சொல்ல வேண்டியதுதான்! என்றார். உனக்கு!

எனக்கு ஏன்?” அவள் சொன்னது அல்லவா தவறு என்று கேட்டது அவன் புருவம்.

அவள் சரியாய்த்தான் சொல்லியிருக்கிறாள்.

அதெப்படி? நான் அஞ்சரைக்கே வீட்டுக்கு வந்துவிடறதை நீங்களே பல முறை கண்பர்ம் பண்ணிட்டீங்களே?”

வீட்டுக்கு வந்து விடுகிறாய். ஆனால் யாழினியைப் பொறுத்தவரை நீ வீட்டுக்குள் வரவில்லை.

என்ன சொல்றீங்க?”

புரியலையா?  வீட்டுக்குள் நீ உன் உலகம் என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதனுள் அல்லவா இருக்கிறாய்? வரும் நண்பனுடன் அரட்டை அடித்துக் கொண்டோ டிவியில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டோ செல்போனில் பேசிக்கொண்டோ இண்டர்நெட்டில் மூழ்கியோ கவிதை எழுதிக் கொண்டோ இருப்பதை எப்படி வீட்டில் இருப்பதாய் சொல்கிறாய்? அவளோடு நேரம் செலவிடுவதாய் நினைக்கிறாய்?”

அவனிடமிருந்து பதிலில்லை.

யோசிக்கிறே, அது போதும்! என்றார்.  
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

Friday, July 5, 2013

நல்லதா நாலு வார்த்தை.... 11


இன்றைக்குத் தெரியும்

இதயத்துக்கு;. .

நாளைக்குப் புரியும்

மூளைக்கு.

James Stephens

(‘What the heart knows today the head will understand tomorrow.’)

<>

கண்ணுக்குத் தெரிவதைப்

பிரதிபலிப்பதில்லை ஓவியம்;

தெரிய வைக்கிறது.

- Paul Klee 

(‘Art does not reproduce the visible, but makes visible.’)

<>

விட்டுத் தள்ள

வேண்டியதறிவதே

விவேகம்.

-William James

(‘Wisdom is learning what to overlook.’)

<>

எப்படி இருக்கிறது

என்று பார்க்க வேண்டும்

எப்படி இருக்க வேண்டும்

என்றல்ல.

-Albert Einstein

(‘A man should look for what is, and not for what he thinks should be.’)

<>

நீளமல்ல முக்கியம்

வாழ்க்கையின்

ஆழமே!

-Emerson

(‘It is not length of life but depth of life.’)

<>

விஷயங்கள் அநேகமாய்

நடந்துவிடும் சரியாக

ஆனால்

வெறுமேபார்த்துக் கொண்டிருக்க

சில நேரம்

வேண்டும் உறுதியான மனம்.

-Hedley Donovan

(‘Things will probably come out all right, but sometimes it 

takes strong nerves just to watch.’)

<>

வரும் ஒளி உணர்ந்து

இருள் விலகுமுன்

கருக்கலில் பாடும் பறவையே

நம்பிக்கை.

-RabindranathTagore

(‘Faith is the bird that feels the light

and sings when the dawn is still dark.’)


<<<>>>

(படம்- நன்றி:கூகிள்)