Thursday, December 29, 2011

இனிய 2012!


கிழ்வுக்கென்ன வேண்டும்
மனம் ஒன்றைத் தவிர?
மைதிக்கென்ன  வேண்டும் 
அன்பு ஒன்றைத் தவிர?
வெற்றிக்கென்ன வேண்டும் 
முயற்சி  ஒன்றைத் தவிர?
ம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை  ஒன்றைத் தவிர?
ழிகாட்டிட என்ன வேண்டும்
கடமை  ஒன்றைத் தவிர?
வாழ்க்கைக்கென்ன வேண்டும்
பக்குவம்  ஒன்றைத் தவிர?
னிமைக்கென்ன வேண்டும்
2012 -ஐத் தவிர?

The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2012!
       
       <><><>                                                                                           
                                                                                           

Monday, December 19, 2011

மழையின் வர்ணங்கள்




தனோடெல்லாமோ ஒப்பிட்டு 
எப்படியெல்லாமோ 
வர்ணித்து விட்டனர் அதை... 
மழை என்று சொன்னாலே போதுமே 
மனதுக்குள் பெய்யுமே!  

ந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால் அது எப்போது பெய்தாலும் 
சூழ்நிலை மறந்து ரசிக்க 
மனதுக்குத் தெரிகிறது!


நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம் 
விக்கல் எடுக்கும் மரங்கள் 
வருவதைப் பிடிக்க 
வைத்துள்ள பாத்திரங்கள்.
வழிந்தோடும் வாகன மேற்கூரைகள் 
வடிந்து வீணாகும் தார்ச்சாலைகள்... 
என எல்லா இடத்திலும் 
ஒரு போல பெய்யும் மழை 
அன்பை எப்படிப் பொழிவது 
என்பதைச் சொல்ல வருகிறதோ!


த்தனையோ மணித்துளிகள் 
தொடர்ந்து பெய்தாலும் 
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!


ழை பெய்கிற பொழுதுகளில் 
மட்டுமே தெரிகிறது 
விரிந்து பரந்த அவர்கள் 
ஆகாயக் கூரையில் 
எத்தனை பொத்தல்கள் என்று 
பிளாட்பாரவாசிகளுக்கு! 


பூமியின் கோபத்தை 
மழையால் ஒத்தியெடுத்து  
ஆற்றியது ஆகாயம்!


காயத்துக்கு 
வாழ்க்கைப்பட்ட நீர் 
ஆசையுடன் பார்க்க வந்தது 
பிறந்த வீட்டை!


னக்கும் எனக்கும் இடையே 
ஒவ்வொன்றாய் விழும் 
மழைத் துளிகளினூடே 
புகுந்து புறப்பட்டு 
உன்னைச் சென்றடைந்த 
என் எண்ணங்களை 
உலர்த்தி எடுத்துக்கொள்!


ன் மேல் பட்ட துளியும் 
என் மேல் பட்ட துளியும் 
எங்கோ ஒன்றாகி 
கடலில் கலந்து 
மறுபடி எழுந்து மேகமாகி 
என்றோ பொழியும் 
நாம் சேர்ந்திருக்கும்போது 
நம் மீது ஒன்றாக!

<><><>
( 'வார மலர் ' 27-11-2011இதழில் வெளியானது )


Saturday, December 10, 2011

தீபம்







ளியில் 
ஒளிந்திருக்கும் பெரு 
வெளியில் சஞ்சரிக்கிறேன்  .
எங்கும் பிரகாசமாக. 
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.

கார்த்திகை திருநாள் மனதின் 
கார்மேகம் கனிந்து 
உள்ளுக்குள்ளும் 
பொழிகிறது மழை. 

தீபங்களின் நடுவே 
தீவாக நின்று துதிப்பது 
வேறெதிலும் கிடைத்திராத 
தீராத சந்தோஷம். 

தீபத்தால் ஆராதனை 
செய்கிறோம். இன்று 
தீபத்தை ஆராதிக்கிறோம்.

<><><>



Tuesday, December 6, 2011

திறப்பு விழா




திறப்பு விழா இனிதே முடிந்தது.


பஜாரில் ஏகாம்பரத்தின் புதிய கடை பளிச்சென்றிருந்தது.

கடையைத் திறந்து வைத்தவர் பக்கத்துக் கடைக்காரர். வந்திருந்த அன்பர்கள் கை தட்ட, எல்லாருக்கும் இனிப்பு வழங்கினார் ஏகாம்பரம்.

கோபமாக வந்த அவர் மகன் இரைந்தான். ''என்னப்பா இது? ஒரு பெரிய புள்ளியை வெச்சு நம்ம கடையைத் திறக்கணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருந்தேன். நீங்க என்னடான்னா, அவங்க எல்லாரையும் விட்டுட்டு பக்கத்துக் கடைக்காரரை வெச்சுத் திறந்து... இப்படிப் பண்ணிட்டீங்களே?''

''எல்லாம் சரியான காரணத்தோடு தான்,'' என்றார் ஏகாம்பரம் பொறுமையாக, ''யோசிச்சுப்பாரு, திறந்து வைக்கிறவங்க இன்னிக்கு வருவாங்க, நாளைக்குப் போயிடுவாங்க. பக்கத்துக் கடைக்காரர் என்னிக்கும் நம்மகூட இருக்கிறவர். அதான் அவரை வெச்சுத் திறக்க வைத்தேன்.''  

(குமுதம் 11-04-2007 இதழில் வெளியானது)