Tuesday, November 18, 2025

மாபெரும் கேள்விகள்...


'விஞ்ஞானி என்பவரை விஷயம் தெரிந்த ஓர் சிறுவன் எனலாம். ஒவ்வொரு சிறுவனிடமும் ஒரு விஞ்ஞானி இருக்கிறார். மற்றவர்கள் அதைவிட்டு வெளிவர, அப்படியே இருப்பவர் விஞ்ஞானி ஆகிறார்.'
இந்த அழகிய வரிகளைச் சொன்னவர் George Wald...
நோபல் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி...
இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்னவை சுவை..
‘இன்று உலகில் உயிருடன் இருக்கும் எந்தப் பிராணியும் மிகப் பழங்காலத்தில் இந்த கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினத்துடான உடை படாத சங்கிலித் தொடர்பை பிரதிபலிக்கிறது. அதாவது மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்.’
‘மாபெரும் கேள்விகள் என்பது ஒரு புத்திசாலித்தனமான குழந்தை கேட்டு, பதில் கிடைக்காததால் கேட்பதை நிறுத்தி விட்ட அந்தக் கேள்விகள்.’
‘வலியின் அனுபவம் இல்லாவிட்டால் சந்தோஷத்தை அனுபவிப்பது ரொம்ப கடினமானது.’
‘மனிதர்கள் விரும்பும் பெரும்பாலான பொருட்களின் கஷ்டம் என்னவென்றால் மனிதர்கள் அவற்றை அடைந்து விடுவது தான்!’
‘விஞ்ஞானி என்பவர்தான் மனிதர்களிலேயே மிகவும் சந்தோஷமான நபராக இருக்க வேண்டும்.’
‘என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை மாலிக்யூல்களுடன் கழித்திருக்கிறேன், நல்ல நண்பர்கள் அவை.’
‘கடவுளை நம்ப நான் விரும்பவில்லை ஆகவே தானாக உதித்து வந்த பரிணாமம் என்ற, விஞ்ஞானப்படி சாத்தியமற்றது என்ற (லூயி பாஸ்டரும் மற்றவர்களும் நிரூபித்த) கொள்கையை நம்புகிறேன்.’
‘என் மாணவர்களிடம் நான் சொல்லுவது நிறைவேற்ற முடிகிற ஒரு நோக்கத்தை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!