பணம் காசு பார்க்கப் போறேண்டி,
என்று கணவன் அழைக்க,
“டவுனு பக்கம் போகாதீங்க மாமா.. டவுணாகிப் போயிடுவீங்க,” என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'எங்கள் வீட்டு மகாலஷ்மி’ (1957) படத்தில் வரும்.
பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் (“வேர்த்துப் புழுங்கினா பீச்சுக்குப் போவேன், மீதப் பணத்திலே மீனு வாங்குவேன்.. ஆத்தாடி உன் கையில கொடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்..”) என்று அவன் அடுக்க, அங்கே என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க (“காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்.. பி.ஏ படிப்பு பெஞ்சு துடைக்குதாம்.. மேலே போறது நூத்தில ஒண்ணாம், மிச்சமுள்ளது லாட்டரி அடிக்குதாம்..”), பாட்டிலேயே அவன் மனம் மாறும் (“நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி.. நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி”) மனம் மறவா பாடல்.
சீர்காழியும் பி சுசீலாவும் வெளுத்து வாங்கியிருப்பார்கள், ராகத்தின் அட்டகாசமான இழுப்புகளை அஸால்டாக கையாண்டபடி…
மாஸ்டர் வேணுவின் இசைக்கு லாஸ்டிங் வரிகளை கொடுத்திருப்பார் உடுமலை நாராயண கவி. ஈ.வி.சரோஜாவின் ஆட்டம் ஆஸம்!

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!