சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி John F Kennedy யின் சகோதரர்... ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் வென்று வருகையில் சுடப்பட்டு இறந்தார். ஜனங்களின் பிரியமானவர்...
சொன்னவை அருமை...
‘விட்டுப்போவதே இல்லை எனில் நீ தோற்றுப் போவதே இல்லை.’
‘ஒரு இலட்சியத்துக்காக நீ எழுந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு சின்ன நம்பிக்கை அலையை எழுப்புகிறாய்.’
‘ஆகச் சிறந்த பங்களிப்பை செய்யும்போதுதான் நீங்கள் ஆகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறீர்கள்.’
‘வாழ்க்கையின் குறிக்கோள் என்னவெனில் விஷயங்கள் முன்னேற ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பது தான்.’
‘எல்லாம் எப்படி நடக்கின்றன என்று பார்த்து ஏன் அப்படி என்று கேட்பார்கள் சிலர், நானோ நடந்திடாத விஷயங்களை கனவு கண்டு ஏன் அது நடக்கவில்லை என்று கேட்கிறேன்.’
‘கண்ணியம்தான் ஒரு மனிதனின் இயற்கையான சுபாவம்.’
‘விமரிசனம் இல்லாத வாழ்க்கை வாழத் தகுந்ததல்ல.’
‘உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி அது அமைய முடியும்.’

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!