Friday, November 21, 2025

ஆழ்கடலுக்கு அடியில்...


ஆழ்கடலுக்கு அடியில ஃபிளாட்டா ஒரு நிலம் இருக்கணும்னுதானே நினைக்கிறீங்க? அப்படித் தான் முன்னால நினைச்சிட்டிருந்தாங்க. அப்போ அந்த பொண்ணு வந்து சொல்லிச்சு, அங்கே மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைஞ்சிருக்குன்னு.
நெம்பக் கஷ்டப்பட்டாங்க நம்பறதுக்கு. அப்புறம் பார்த்தா 40000 மைலுக்கு குன்றுகள் நீண்டு கிடக்குது. பூமி சுற்றளவே சுமாரா 25000 தான்.
இது நடந்தது 1957-லே. 20 வருஷம் கழிச்சு அடுத்த தகவலை முன்வெச்சார். கண்டங்கள் ஒண்ணை விட்டு ஒண்ணு நகருவதை... பரிகசிச்சாங்க, ஆனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாங்க.
அந்தப் பொண்ணு Marie Tharp… இன்று பிறந்தநாள்!
கூகிள் ஒரு டூடில் வெளியிட்டிருக்காங்க அவங்களுக்காக 2022 -இல்.
அவரைப் பத்தி நிறைய புத்தகங்கள் வந்திருக்கு குழந்தைங்க படிக்கிறதுக்கு. படிக்கக் கொடுங்க. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்...

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!