Sunday, December 6, 2015

அவள் (கவிதைகள்)



197
சிலிர்ப்பதை வைத்து 
சொல்ல முடியவில்லை
வருடுவது தென்றலா
உன் நினைவா என்று.
<>

198
தளிர் இலைகளினூடே 
தேடினேன் உன் 
தண்மையை.
<>

199
உன் விழிகளிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
உன் விழிகள்!
<>

200
உன்னை 
அதிசயிக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்.
<>

201
தொட்டு விடுவேனோ
ஆயிரம் கவிதை?
துடிப்பாக இருக்கிறது.
<>

202
எந்தப் பாடலும்
உன் உதடுகள் முணுமுணுக்கையில்
என் பாடலாகிறது.
<>

203
சற்று நேரம் உன்னோடு
பேசிக் கொண்டிருந்தேன்..
திரும்பினால்
மறுநாள்.

<><><>

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சற்று நேரம் உன்னோடு
பேசிக் கொண்டிருந்தேன்..
திரும்பினால்
மறுநாள்.//

:)

அவள் (கவிதைகள்) அருமையாக உள்ளன. பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே
அருமை

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன-

balaamagi said...

அனைத்தும் அருமை,

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!