Friday, December 18, 2015

அவள் (கவிதைகள்)



211
அன்பு உன்னை நெய்தது
அதன் ஒளி என் மேல் பெய்தது.
<>

212
நேற்று தவறவிட்ட உன் 
நினைவொன்று
இன்று காலை கிடைத்ததில்
நாள் என் வசமானது.
<>

213
எத்தனை தூரம் நீ
எனை விட்டு அகன்றாலும்
இழுத்து என் அருகில்
இட்டுவிடுகிறது
உன் மீதான நினைவுகள்.
<>

214
ஒரு நாள் லீவு கொடேன்
சிந்தனைக்கு வேறொரு வேலை
வந்திருக்கிறது.
<>

215
நத்தைகள் குதிரைகளாயின
காத்திருந்து உனைப் பார்த்த நேரம்.
<>

216
மனதின் கதவுகளை
அடைத்துவிட்டுத் திரும்பினால்
உள்ளே நீ.
<>

217
உன் முகத்திரையில்
நொடிக்கொரு ஓவியம்.

<><><>

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு நாள் லீவு கொடேன்
சிந்தனைக்கு வேறொரு வேலை
வந்திருக்கிறது.

அருமை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே நல்லா இருக்கு.

ஆஹா .... 214 சிந்திக்கத்தான் வைக்கிறது !

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் அருமை அருமை...ரசித்தோம்...

Thulasidharan V Thillaiakathu said...

அதிலும் அந்த விடுமுறை!! ஆஹா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!