Wednesday, June 10, 2015

நல்லதா நாலு வார்த்தை.... 48


'முடிவிலா விஷயங்கள் இரண்டே இரண்டு: 
பிரபஞ்சமும் மானிட மடமையும். 
முதலாவதைப் பற்றி எனக்கு 
முழு நிச்சயமில்லை.'
- Albert Einstein
('Only two things are infinite, the universe and human
stupidity, and I'm not sure about the former.')
<>

’இதயத்தைத் தவிர எதனாலும் 
இதயத்தை மாற்ற முடியாது.’
- Carroll O'Connor
(”Nothing but the heart can change the heart.’)
<>

’எல்லாவற்றுக்கும் மக்கள்
முன் தலைமுறைகளைக் 
குற்றம் சொல்லக் காரணம்
அதை விட்டால் சொல்ல 
ஓரிடமே வேறுண்டு என்பதே.’
- Doug Larson
('The reason people blame things
on previous generations is that
there's only one other place.')

<>

’இயற்கையின் ஓர் 
அற்புதப் படைப்பு
குடும்பம்.’
- George Santayana
(’The family is one of nature's
masterpieces.’)
<>

’அனைத்து நம் அறிவும் 
நம் பார்வையின் பாற்பட்டது.’
- Leonardo da Vinci.
('All our knowledge has its 
origins in our perceptions.)
<>

'ஏராளமாக சம்பாதிப்பதற்கும் 
செல்வந்தராக இருப்பதற்கும் 
ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.’
- Marlene Dietrich
('There is a gigantic difference
between earning a great deal of
money and being rich.')
<>

’உங்களிடம் வம்பளப்பவர் 
உங்களைப் பற்றியும் 
வம்பளப்பர்.’
- Proverb.
('Who gossips to you will
gossip of you.')
<><><>

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

'முடிவிலா விஷயங்கள் இரண்டே இரண்டு:
பிரபஞ்சமும் மானிட மடமையும்.

ஆகா அருமை
நன்றி நண்பரே
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசம் உட்பட அனைத்தும் உண்மைகள்...

கீதமஞ்சரி said...

சிந்திக்கவைக்கும் பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.

ராமலக்ஷ்மி said...

ஆம், சிந்திக்க வைக்கும் சிறப்பான மொழிகள். பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பழமொழிகள்...சிந்த்திக்கவைப்பவை...தமிழ்படுத்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!