Thursday, April 30, 2020

கணித மேதை...


‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே;
அடைவது அல்ல, முயற்சிப்பதே;
அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே
ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’


‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன்
அதிலிருந்து விலகுகிறேன்,
மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’

‘ஒருபோதும் திருப்தி அடையாததே
மனிதனின் இயல்பு.
ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால்
அதில் அமைதியாக உறைவதில்லை,
அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’

‘மிகக்குறைந்த வார்த்தைகளில்
எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ
அத்தனை சொல்லும் வரை
நான் திருப்தி அடைவதில்லை.
சுருக்கமாக எழுதுவது,
நீளமாக எழுதுவதைவிட
அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’

சொன்னவர் Carl Friedrich Gauss.
உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர்.
Ap. 30.  பிறந்தநாள்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!