Tuesday, January 26, 2016

அவள் - (கவிதைகள்)

239
எல்லாக் கவிதை சேர்ந்தும்
சொல்லாமல் விட்ட 
பொல்லா அழகு.

240
உன் மனதிலிருந்து பெற்றுக்கொண்டதோ 
தன் வெண்மையை 
தும்பைப்பூ?

241
சங்கமிக்கிற என் 
சகல கவிதைகளையும் 
சகித்துக் கொள்ளும் ஒரே நபர்.

242
உன்னை நினைத்ததும் 
முகிழ்த்த கவிதை
உன்னைப் பார்த்ததும் நாணி 
ஒளிந்துகொண்டது.


243
என்னிடமிருந்த பாதிக் கவிதை
உன்னைக் கண்டதும்
ஆ என் மறு பாதி என்று
ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டது.

244
அதெப்படி உன்னால்,
ஆஹா என்ன ஒரு நுட்பம் என நான்
வியப்பதற்கு முந்தின செகண்ட் வரை 
அப்பாவியாகக் காட்சியளிக்க முடிகிறது?

245
என் பார்வை 
உன்னை அடையுமுன்
உன் புன்னகை
என் மனதை.

><><><

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன்னை நினைத்ததும்
முகிழ்த்த கவிதை
உன்னைப் பார்த்ததும் நாணி
ஒளிந்துகொண்டது.//

//என் பார்வை
உன்னை அடையுமுன்
உன் புன்னகை
என் மனதை.//

:)

சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

என் பார்வை
உன்னை அடையுமுன்
உன் புன்னகை
என் மனதை.

அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தையும் ரசித்தேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!