Sunday, February 1, 2015

அவள் - 15


92
இன்னும் அருகில்
வருகிறாய்,
உன்னைப் பிரியும்
நாட்களில்.
><>< 

93
இதயம் நழுவி
இதயத்தில் விழுந்தது.
><>< 

94
திங்கள் ஞாயிறு ஆனது,
உன்னைக் காணும்
தினம்.
><>< 

95
அன்பு வெறும்
வார்த்தையில்லை,
அறிய வைத்தாய்.
><>< 

96
சந்திக்காத நாட்களும்
இனிக்கின்றன
சந்திப்புகளின் நினைப்பில்..
><>< 

97
பிசகில்லாத
இனிய கனவுகளுடனான
பின்னிரவுத் தூக்கம் போலும்
நீ.
><>< 

98
நீ
நுழைந்தாய்
நிமிர்ந்தது
நெஞ்சம்.


><><><>< 

(படம் - நன்றி : கூகிள்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பை அறிய வைத்தது உட்பட அனைத்தும் ரசனை...

Rekha raghavan said...

ஆஹா அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

நீ
நுழைந்தாய்
நிமிர்ந்தது
நெஞ்சம்.

அருமை அருமை
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

த.ம. +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே அருமை.

//சந்திக்காத நாட்களும் இனிக்கின்றன சந்திப்புகளின் நினைப்பில்..//

இனிமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!