Friday, June 7, 2013

நல்லதா நாலு வார்த்தை... 8


மேதைமையின் நிஜ
அறிகுறி
அறிவாற்றல் அல்ல,
கற்பனா சக்தி.
- Albert Einstein
(‘The true sign of intelligence
is not knowledge but imagination.’)

<> 

நேசிக்கும் நெஞ்சமே
நிஜமான விவேகம்.

- Charles Dickens
(‘A loving heart is the truest wisdom .’)

<>

'துணிவின் அளவில்
விரியும், சுருங்கும்
வாழ்க்கை.'

-Anais Nin
(‘Life shrinks or expands in proportion to one’s courage.’)

<>           

'பல்வேறு திட்டங்கள் தீட்டி
பலமாக உழைக்கையில்
நமக்கென்ன நிகழ்கிறதோ
அதுவே வாழ்க்கை.

-Allen Saunders
(‘Life is what happens to you while you’re 
busy making other plans.’)

 <>

ராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!

- Emily Dickinson
(That it will never come again is what makes life so sweet.’)

<>

ற்பனா சக்தியை தம்
ஞாபக சக்தியென
கருதும் மனிதர்
அநேகர்.

-Josh Billings
(‘There are lots of people who mistake their 
imagination for their memory.)

 <>

நேற்றைய சிராய்ப்புகள் மேல்
நாமணியும் உற்சாக உடை
நம்பிக்கை.

-Benjamin De Casseres
(‘Hope is the gay, skylarking pyjamas
we wear over yesterday’s bruises.’)

<<<<>>>>
( படம்- நன்றி: கூகிள் )



9 comments:

Avargal Unmaigal said...

பகிர்வும் மொழிபயர்ப்பும் மிக அருமை

Yaathoramani.blogspot.com said...

தேர்ந்தெடுத்த பொன் மொழிகள்
அத்தனையும் மிக மிக அருமை
கவித்துவமான மொழிபெயர்ப்பு மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

கவியாழி said...

அத்தனையும் முத்துக்கள் அறிவார்ந்த சொத்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்தது :

வராது மீண்டும் என்பதே...
வாழ்வின் சுவை...!

கரந்தை ஜெயக்குமார் said...

வராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’
அருமையான பழமொழி
அய்யா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘வராது மீண்டும் என்பதே வாழ்வின் சுவை!’// ;)))))

சுவையான பதிவு. பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள். தமிழாக்கத்துக்கு நன்றி.

உஷா அன்பரசு said...

நாலு வார்த்தை சொன்னாலும் நல்லதா இல்ல சொல்லி இருங்கிங்க.. அருமையா கேட்டுக்கிறோம்!
/ நேற்றைய சிராய்ப்புகள் மேல்
நாமணியும் உற்சாக உடை
நம்பிக்கை.’// - ரொம்ப பிடிச்ச நல்ல நாலு வார்த்தை..

வெங்கட் நாகராஜ் said...

// ‘வராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’//

எத்தனை ஒரு பெரிய விஷயம்..... சிறப்பான மொழி பெயர்ப்பு. தொடரட்டும் பகிர்வுகள்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!