Friday, March 20, 2020

யோகமும் காதலும்...


'யோகமும் காதலும் துணிந்தவரையே நாடும்.'
'அப்பழுக்கற்ற ஆனந்தம் என்றொன்று கிடையாது;
சற்றே கவலை எப்போதும் இருக்கும் அதனூடே .'
'நேசிக்கப் பட வேண்டுமானால்
நேசிக்க முடிகிறவராக இரு.'
'முந்திச் செல்ல மற்ற குதிரைகள் இருக்கும்போது ஓடும் அளவுக்கு,
மற்ற நேரத்தில் ஓடுவதில்லை குதிரைகள்.' 
'பழக்கங்கள் குணாதிசயமாக மாறுகின்றன.'
'ஓய்வெடுங்கள். ஆறப்போட்ட நிலம்
அறுவடையை அள்ளிக் கொடுக்கிறது.'
2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர் Ovid. (கி மு 47 - கி பி. 18 )
ரோம் நகரத்துக் கவி. எழுத்துக்காக அரசு வேலையைத் துறந்தவர்.
உலக வரலாற்றையும் கிரேக்க இதிகாசங்களையும் இணைத்து இயற்றிய Metamorphoses என்ற 15 வால்யூம் நூல் ஷேக்ஸ்பியரையே ஈர்த்த காவியம்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தகவல் பகிர்வு. நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!