Tuesday, March 3, 2020

மனதுக்குள் அடித்த மணி...

கோதுமையைத் தீட்ட இத்தனை கஷ்டப் படறாங்களே? தோன்றிற்று அந்த 12 வயதுப் பையனுக்கு. அதற்கொரு மெஷினைச் செய்து அந்த மில்லுக்குக் கொடுத்துவிட்டான் அந்த 1857 இல்.

16 வயதில் ஒரு பேசும் பொம்மையைச் செய்ய முயன்றான். அதற்கு ஒரு தொண்டைக் குழாய் அமைத்து காற்றை விதமாகச் செலுத்தி நாலைந்து வார்த்தைகள் பேச வைத்துவிட்டான்.

 பேசும், கேட்கும் சக்தி இல்லாத அம்மாவும் மனைவியும்! அந்த சோகம் ஆழப் பதிந்து மனதை உந்தி விரட்டியது. எப்படியாவது ஒரு பேசும் கருவி கண்டு பிடிச்சிரணும்! அதான் லட்சியம். அதில் உக்கிரமாக உழன்றதில் இடறி விழுந்த கருவிதான் டெலிஃபோன்.

மணியடித்தது யாருக்கென்று ஊகித்திருப்பீர்கள். அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல். இன்று பிறந்த நாள்!

வார்த்தைகளை ஒலிக் கதிராக மாற்றி செலினியம் தகட்டில் செலுத்தினால் அது தூரத்திலிருக்கும் மற்றொரு தகட்டில் அப்படியே வெளிப்படுத்த, பேட்டரியுடன் கூடிய ஸ்பீக்கரில் அது ஒலித்த வித்தைதான் அவர் சிந்தையில் உதித்த விந்தை.

தவிர கண்டுபிடித்தது மெட்டல் டிடக்டர்.. பேச்சை பதிவு செய்யும் Graphophone.. கேள்வியை அளக்கும் ஆடியோ மீட்டர்.

பஞ்ச்:  கையில் ஆளுக்கொரு ஃபோனை வைத்துக் கொண்டு அலையறோம். ஆனால் கண்டுபிடித்த கிரஹாம்பெல்லோ தன் அறைக்குள் நுழைய விட்டதில்லை வேலை நடக்காது என்று.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு லட்சியம்...!

வெங்கட் நாகராஜ் said...

வியப்பான தகவல் - அவர் கண்டுபிடித்ததை அறைக்குள் நுழைய விடாதது!

தொடர்ட்டும் சிறப்பான தகவல்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!