Tuesday, March 10, 2020

உதவிடவே உதித்தவர்...

பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அந்த நர்ஸ். ஓடிவந்த ஏழைச் சிறுமி தன் தாய்க்கு சுகமில்லை என அழைத்தாள். பார்க்கச் சென்றால், குறுகிய சந்துக்களின் வழியே திறந்த கழிவிடங்களினூடே ஒடுங்கிய படிகளேறி ஒரு சிறிய வீட்டில் நுழைந்தால், பிரசவித்து ரெண்டே நாளான அந்தத் தாய் குழந்தையுடன் அழுக்கடைந்த படுக்கையில் ரத்தம் நிறைய இழந்த நிலையில்..
அந்தக் காட்சி அவரை உலுக்கிற்று. அவளைக் காப்பாற்றிய அந்தக் கணம் அவர் வாழ்வில் அதி முக்கியமானது. காலேஜும் லேபரட்டரியும் மறந்தார். படித்த படிப்பைக் கொண்டு நேரடியாக ஏழ்மைச் சுற்றுப் புறத்துடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்தார். 
அவர் Lillian Wald.. இன்று பிறந்த நாள்!
அது 1893. Public Health Nurse என்ற கருத்தை உருவாக்கினார். மருத்துவ மனைக்கு வெளியே நடுத்தர, ஏழை மக்களுக்கு உதவும் தாதிகள் என்று சொல்லலாம். வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பில் உதவுதாகட்டும், பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதாகட்டும் முன் நின்றார். பொது ஆரோக்கியத்துக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபட தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. 
'வித்தியாசமான கலாசாரம் கொண்டு விரிந்த சுற்றுப்புறமே இந்த உலகம்' என்பதுதான் அவரது தீர்மானமான நம்பிக்கை..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத செய்தி...

வெங்கட் நாகராஜ் said...

முகநூலிலும் படித்தேன். நற் செய்திகள் சொல்லும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!