Saturday, September 22, 2018

அன்பு ஆறு! (கவிதைகள்)

அன்பு - 1
அதன் அகலத்துக்கு
எல்லையில்லை.

அன்பு - 2.
எப்போது எங்கே
எத்தனை பாயும்
எனத் தெரியாதது.

அன்பு - 3.
பெரு வெள்ளம்.
ஆபத்து இல்லை.

அன்பு - 4.
நில்லாமல் கவனியாமல்
புறப்படுவது.

அன்பு - 5.
விண்ணையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
கயிறு.

அன்பு - 6.
குடைகளால் தடுக்க முடியாத
மழை.
><><

4 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. 3,6 மிகப் பிடித்தன.

கோமதி அரசு said...

குடைகளால் தடுக்க முடியாத
மழை.//

அனைத்தும் அருமை. குடைகளால் தடுக்க முடியாத மழையை ரசித்தேன் அதிகமாய்.

கே. பி. ஜனா... said...

ராமலக்ஷ்மி; கோமதி அரசு; கரந்தை ஜெயகுமார்: நன்றி... மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.

குடைகளால் தடுக்க முடியாத அன்பு மழை.... பெருகட்டும்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!