Monday, September 24, 2018

மழலை... (கவிதைகள்)


1
காலையில் மெத்தை விரிப்பை
உதற முடியவில்லை மடித்துவைக்க.
இரவில் சொன்ன கதைகள்  
குழந்தைகளிடம் பெற்ற
ஏராளம் ஆச்சரியக் குறிகள்
எங்கும் சிந்திக் கிடந்தமையால்.
><><

2
கதையில் வரும் ராஜகுமாரியாக
தன்னை நினைத்துக் கொள்ளும் குழந்தையிடம்
சொல்ல மனசே வரவில்லை
அவள் படும் கஷ்டங்களை.
><><

3
நான் அவளுடன் பேச
மழலை மொழியொன்றை
வைத்திருக்க,
அவள் பொம்மைகளுடன் பேச
பொம்மை மொழியொன்றை
வைத்திருக்கிறாள்.
><><

4
அத்தனை பொம்மைகளையும்
தாண்டி நீடிக்கிறது
குழந்தையின் அன்புவட்டம்.
><><

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

மழலை கவிதைகள் அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!