Wednesday, July 8, 2015

அவள் (கவிதைகள்)

148
இதயத்தில் நீ இருக்கும்
இடத்தைக் கண்டுபிடிக்க
ரொம்ப ஒன்றும் சிரமப்படவில்லை
எஞ்சியிருக்கும்
இதயத்தைக் கண்டுபிடிக்கத்தான்
திணறுகிறேன்.
 
149
குளிர்கிறது வெயில்
உன் நினைவுகளுடன்
நடக்கையில்.

150
கழற்றி வை அந்தக்
காமிராவை கண்ணிலிருந்து
படம் பிடித்தது போதும்
என் உள்ளத்தை.

151
முல்லைப் பூவே
பிடித்த பூவாக இருந்தது உன்
முகப்பூ பார்க்கிற வரையில்.

152
வாழ மறந்த கணங்களை
வாழ வைத்தவள்.

153
உன்னை ஒருமுறை பார்க்கவேண்டுமே
என்கிறது என்
டயரி.

154
தினமும் பார்ப்பதுண்டு
அன்றைய ராசிபலன்.
உன்னைச் சந்திக்கிற வரையில்.

><><><

7 comments:

ரிஷபன் said...

அவளுக்காக உருகும் மனம்
தருமே அழகுக் கவிதை தினம் தினம்

balaamagi said...

வணக்கம்,
கவி வரிகள் அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கழற்றி வை + டயரி மிகவும் பிடித்தது...

Unknown said...

காதல் மயக்கம்! கவிதை பிறக்கும்!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ மறந்த கணங்களை
வாழ வைத்தவள்.

அருமைநண்பரே
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமை! அனைத்தும் ரசித்தோம்....

ஸ்ரீராம். said...

ரசித்தேன். ரசித்தேன். ரசி ரசி என்று ரசித்தேன். அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!