Sunday, July 19, 2015

அவள் - (கவிதைகள்)

155
இரு விழிகள்தாம்
ஒரு பார்வைதான்
இதயத்தின் ஆழம் வரை
ஊடுருவுகிறதே…

156
படைத்த கையைத்
துடைத்துவிட்டு
அழகு கேட்டது
அப்புறம் யார்?

157
இன்னும் எழுதவில்லை
உன்னிடம் நேரில் சொல்லத்தக்க 
ஓர் கவிதையை.

158
ஒரு பார்வைதான் வீசுகிறாய்
உருவியெடுத்து விடுகிறது
ஒரு வருட நினைவுகளை என்
கண்ணிலிருந்து.

159
விழிகளிலும் தெரிகிறது
உன் நாணம்.

160
இவ்விடம் அவள் மீது
கவிதை எழுதி தரப்படும்:
மனதில் தொங்காத பலகை.

161
எழுதும்போதே
கரைகின்றன வார்த்தைகள்
மனதில் உன்னை
நினைத்து.

><><><

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... ரசித்தேன்...

கோமதி அரசு said...

கவிதை அருமை.

”தளிர் சுரேஷ்” said...

குட்டிக்கவிதைகள் ஒவ்வொன்றும் சிறப்பு! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை. ரசித்தேன்.

த.ம. +1

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!