Thursday, February 12, 2015

நல்லதா நாலு வார்த்தை... 42.


'மிகச் சிறந்தது 
என்றுமே 
புதியது.'
- Emerson
('The excellent is new for ever.')
<>

’மிகுந்த ஆற்றலை விட
மிதமிஞ்சிய சுமை 
வேறு இல்லை.’
- Charles Schulz
('There is no greater burden
than great potential.')
<>

’ஒரு முறை உங்கள் வழியைத் 
தவற விடுவதை விட 
இருமுறை கேட்டுக்கொள்வது 
நல்லதே.’
- Proverb
(‘Better to ask twice than to
lose your way once.’)
<>

‘நிஜத்தில் நாம் எதையும் 
படைப்பதில்லை,
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’
-- Jean Baitaillon
(‘Really we create nothing.
We merely plagiarize nature.’)
<>

‘நம்மைத் 
தொலைத்த பின்னரே
நம்மைப் 
புரிந்துகொள்ள 
ஆரம்பிக்கிறோம்.’
- Thoreau
(‘Not until we are lost do we h
begin to understand ourselves.’)
<>

'கண்ணைத் திற, உள்ளே பார்.
நீ வாழ்ந்திடும் வாழ்க்கை 
உனக்கு திருப்தி தானா?'
- Bob Marley
('Open your eyes, look within. Are you
satisfied with the life you're living?')
<>

’மகிழ்வான வாழ்க்கைக்குத் தேவை 
பெரிதாக ஒன்றுமில்லை.
அதெல்லாம் நமக்குள்ளேயே, 
நாம் சிந்திக்கும் விதத்தில் உள்ளது.’
- Marcus Aurelius
('Very little is needed to make a happy life.
It is all within yourself, in your way of thinking.')
<><><>

(படம் - நன்றி: கூகிள்)

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழாக்கம் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

// ’ஒரு முறை உங்கள் வழியைத் தவற விடுவதை விட இருமுறை கேட்டுக்கொள்வது நல்லதே.’//

:)

ADHI VENKAT said...

அனைத்தும் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

பல உண்மைகள்... சிலது எனது அனுபவத்திலும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

வார்த்தைகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

கண்ணைத் திறக்க வைக்கும் கருத்துகள்! பகிர்வுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் திரு ஜனா அவர்களே

அருமையான கருத்துகள் - தமிழாக்கம் நன்று -

// ஒரு முறை உங்கள் வழியைத் தவற விடுவதை விட இருமுறை கேட்டுக்கொள்வது நல்லதே.//

அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு கருத்து.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

மனோ சாமிநாதன் said...

//நம்மைத்
தொலைத்த பின்னரே
நம்மைப்
புரிந்துகொள்ள
ஆரம்பிக்கிறோம்.’//

எத்தனை நிதர்சனமான உண்மை!

ரிஷபன் said...

நிஜத்தில் நாம் எதையும்
படைப்பதில்லை,
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’

உண்மைதான்

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.....

//ஒரு முறை உங்கள் வழியைத்
தவற விடுவதை விட
இருமுறை கேட்டுக்கொள்வது
நல்லதே.’//

அதே தான்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!