Tuesday, March 26, 2013

நல்லதா நாலு வார்த்தை...



ல்லாம் இழந்தோம்
எனும்போதும் நினை
எதிர்காலம் மிச்சமிருப்பதை! 

_
ராபர்ட் கோடர்ட்.

('Just remember, when you think all is lost, 
the future remains.' – Robert Goddard)

*
ட்டிச் சென்றடைய 
ஓர் இலக்கு 
என்பதே வாழ்க்கையில்
கண்டடையத் தகுந்த 
பேரதிர்ஷ்டம்!

--
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்

(An aim in life is the only fortune worth finding.
-- R. L. Stevenson)

*
னிதன் மட்டுமே 
அழுகிறான் சிரிக்கிறான்
ஏனெனில் 
எல்லாம் எப்படி இருக்கின்றன 
என்பதற்கும்
எல்லாம் எப்படி இருக்கவேண்டும் 
என்பதற்குமான 
வித்தியாசத்தால் பாதிக்கப்படும்
ஏக உயிரினம் அவனே.

--
வில்லியம் ஹெஸ்லிட்

(‘Man is the only animal that laughs and weeps for he is
the only animal that is struck by the difference between
what things are and what they ought to be.’ --William Hazlitt)

*
பாதை உன்னை 
அழைத்துச் செல்லவேண்டாம் 
பாதையற்ற இடத்தில் 
காலை முன் வைத்து 
நடந்து சென்று 
தடத்தை நீ விட்டுச்செல்.

-- எமெர்சன்.

(‘Do not go where the path may lead; go instead where
 there is no path and leave a trial.' -Emerson)

*
னவைப்போல் 
ஒன்றில்லை 
கட்டமைத்திட 
வருங்காலத்தை.

--
விக்டர் ஹியூகோ.

(‘There is nothing like a dream to create the future.’
- Victor Hugo.)

*
டையும் 
அறுவடையை வைத்து
அளவிடாதே 
அன்றைய நாளை!
விதைக்கும்
விதையை வைத்து!

--
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 

(‘Don’t judge each day by the harvest you reap but by the
seeds that you plant.’ – R. L. Stevenson)

*
னைத்தையும் 
அன்புக்கு 
அளி; 
உன்னிதய 
உத்தரவுக்குப் 
உடன்படு.'

--
எமர்சன்

(‘Give all to love; Obey thy heart.’ –Emerson)

<<<>>>

(படம்: நன்றி: கூகிள்)

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதா நாலு வார்த்தை என்று சொல்லி நாலுக்கும் மேல் ஏழாக கொடுத்து அசத்தி விட்டீர்கள். எல்லாமே அருமை. பாராட்டுக்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய பொன்மொழிகள்!
அருமையான தமிழாக்கம். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ராபர்ட் கோடர்ட் & எமர்சன் இவர்களின் வரிகள் மிகவும் பிடித்தவை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனிதனை மாற்றும் மந்திரங்கள்...

கோமதி அரசு said...

நல்ல பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான மொழிகள்.....

ரிஷபன் said...

அனைத்தையும்
அன்புக்கு
அளி;
உன்னிதய
உத்தரவுக்குப்
உடன்படு.'

நான் மிகவும் ரசித்தது..

Ranjani Narayanan said...

எல்லாமே மனதை தொடும் வார்த்தைகளாக அமைந்திருக்கின்றன.
கவிதைகளாக அமைத்துள்ளது நன்றாக இருக்கிறது.

கீதமஞ்சரி said...

இன்றைய பொழுதை இனிமையாக்கிய வரிகள்! நன்றிகள் ஜனா சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!