Monday, August 3, 2020

அழகும் நடிப்பும்...

‘Kaajal’ படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் வருவார் அந்த நடிகை. பத்மினிக்கும் அவருக்குமான காட்சிகளை பார்க்கும்போது (ரோஷமூட்டும் காட்சியில் இவர் சொல்லும் வசனம் ஒன்று பத்மினியின் காதுகளில் மட்டுமல்ல, பார்ப்போர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்) இணையான அழகும் நடிப்பும் உள்ள இவர் இப்படி இன்னும் பெரிய கதாநாயகி ஆகாமல் இருக்கிறார் என்று தோன்றிற்று. எண்ணி சில வருடங்களிலேயே most sought-after ஹீரோயின் ஆகிவிட்டார். திலிப் குமார், தேவானந்த் ஜோடியாக நடித்ததோடு ராஜேஷ் கன்னாவோடு பத்துப் படங்களில் most successful ஜோடியாக.
Mumtaj…. 
அவரின் திரை வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். 1. சாந்தாராம் படங்கள் (Stree, Sehra) உட்பட பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தது... 2. பத்துப் பதினைந்து தாராசிங் படங்களில் ஹீரோயினாக வந்தது. 3. டாப் ஹீரோயினாக ஜொலித்தது.
நட்சத்திரம் ஆக்கிய படம் ‘Do Raaste’ துணை வேடம், சில காட்சிகள்தான் என்றாலும் நான்கு பாடல் காட்சிகள் அவருக்கு கொடுத்தார் Raj Khosla.
கலகலவென்று சிரிக்கும் அந்த innocent laughter.. சட்டென்று அகல விரியும் கண்கள்... பதினெட்டைத் தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் முகம்... அவருக்கே என்று சில அடையாளங்கள்!
திலீப்குமாருடன் ‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ இந்திப் பாடலுக்கு ‘ராம் அவர் ஷ்யாம்’ படத்தில் ஆடும்போதும் சரி, ’காஞ்சீரே.. காஞ்சீரே..’ என்று ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’வில் தேவ் ஆனந்த் தேடும்போது ஆடைத் தொழிற்சாலைக்குள் ஒளிந்தோடும்போதும் சரி, அந்தப் பெரிய கதாநாயகர்களுடன் அழகாகக் காட்சியை பகிர்ந்து கொள்வார், Not to mention ‘பிரம்மச்சாரி’யில் ஷம்மி கபூருடன் ‘ஆஜ்கல் தேரே மேரே சாத்....’ என்ற அந்த அட்டகாச நடனம்!
ரிகார்டுகளில் ஒன்று ராஜேஷ் கன்னாவுடன் நடித்த எட்டுப் படங்களின் பிளாட்டினம் ஜூபிலி. நடிப்பில் கலக்கிய படம் அவருடன் ‘Aap Ki Kasam’ என்றால், முத்திரை பதித்த படம் சஞ்சீவ் குமாருடன் ‘Khilona’ (இந்தி எங்கிருந்தோ வந்தாள்). உச்சக் காட்சியில் ஞாபகம் இல்லையா, ஞாபகம் இல்லையா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சஞ்சீவ்குமாரின் நினைவு நியூரான்களை ஆக்டிவேட் செய்ய பதைபதைப்புடன் கதறும் காட்சியில் ‘இதோ, இன்னொரு மீனாகுமாரி’ யாகியிருப்பார்(Filmfare Award). ‘அரங்கேற்றம்’, இந்தியில் அரங்கேற்றம் ஆனபோது (‘Aaina’), நடிப்புக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு.
பின்னி யெடுத்தது தேவ் ஆனந்தின் மனைவியாக ‘தேரே மேரே ஸப்னே’ யில். நடிகை ஹேமமாலினியுடன் பழகும் கணவனின் போட்டோ பார்த்து கோபத்தில் இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு அடுக்களையில். வீட்டுக்கு வரும் தேவ் அவள் பேச்சைப் பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டபடி அவளிடம் வர, அந்த சண்டைக்கிடையிலும், “ஷூவைப் போட்டுட்டு அடுக்களைக்குள்ளே வராதீங்க, ஆமா!”ன்னு கத்துவது ஓ, மறக்க முடியாத சீன்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் நன்று. சில படங்கள்/பாடல்கள் இவர் நடிப்பில் பார்த்து ரசித்ததுண்டு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!