Friday, August 7, 2020

தேன் (தேனீர்) பாடல் ஒன்று!

இந்தப் பாடலைக் கேட்டதிலிருந்து காலைத் தேநீரின் சுவை கன மடங்கு அதிகரித்துவிட்டது!
என்ன பாடல் அது?
“காலைத் தேனீர்… கையில் ஏந்தி…” (படம்: ‘என்னோடு விளையாடு.’ 2017)
இப்ப வர்ற பாட்டில் எல்லாம் மெலடி இல்லை, ஆழமில்லை, வார்த்தை தெளிவில்லை என்று அலுத்துக் கொள்பவருக்கு இது ஒரு பிளசன்ட் சர்ப்ரைஸ்!
மெல்லத் தொடங்கும் பல்லவி... ஐந்தே ஸ்டெப்பில் ராகம் உச்சத்தை எட்டுகிறது. அப்புறம் அந்த உச்ச வரிகள்.  அவ்வளவே.  வரணும் என்றே இல்லை சரணம். இடையிசையும் தடையிசை ஆகிவிடாமல் பாட்டு அதன் போக்கிலேயே ஆற்றில் படகாக . ஒரு அற்புத இசையனுபவம்!
பல்லவியை தொடர்ந்து முதல் அனுபல்லவியில் ‘உன் கண் பந்தாடும் நேரம்… ஐயோ என்னாகும் நாணம்…’ என்ற வரியில், இசையில் ஒரு வளைவு கொடுத்திருப்பார் பாருங்கள். இலயோரம் திரண்டு கீழே விழும் நீர்ச் சொட்டுப் போல! Ravishing!
அடுத்து ‘சிறு பிள்ளை போல் உனைப் பார்க்கிறேன்..’ என்று ஒரே ஒரு வரி இறங்கி வந்து தொடர்ந்து ‘களங்கம் ஏதும் இல்லையே என்காதல் பிள்ளையே..’ என்று ராகத்தைச் சொடுக்கி ‘சாய்கிறாய் எனைச் சாய்க்கிறாய் ..’ என்று உயர்ந்து, காதலில் படபடத்து அவள் குரல் மூச்சை இழக்கும்போது அவன் கையிலேந்திக் கொள்கிறான் அந்த இசையை. ‘எனக்கானவா… ‘ என அனாயாசமாக உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறான். 
பொதுவாக high pitch -இல் பாடும்போது அதில் ஒரு வலிந்து இழுத்த பிரயத்தனம் தெரியும். இதுவோ சுபாவமாக இருக்கிறது. காதலின் மீதான அதன் தீவிரத்தை காட்ட முற்படும் குரலாக மட்டுமே அது உயர்கிறது. அதோடு உணர்வும் முதல் பகுதிக்கு ஈடாக, பெண்ணின் நாண ராகத்திற்கு ஆணின் விடையாக இருக்கிறது
அதே ஆறு ஸ்டெப் மறுபடியும் நம்மை அழைத்துச் செல்ல… ‘லல லல்லல் லல் லலா… என்று இறுதியில் வயலின் ஒலித்து அடங்குவதும் சரி, ‘அன்பே…!’ என்ற முத்தாய்ப்பும் சரி, ஆழ் மனதை வருடுகிறது. மேல் மனசுக்குள் ஒரு குஷி பிறக்கிறது.
ரெண்டாவது பல்லவியில் ‘ஏதோ என்னில், மாற்றம் வந்தே, கூச்சல் கொண்டேன் உள்ளே…’ இந்த வரி முடிவில் ‘உள்ளே…’ என்று நீண்டு எதிரொலிப்பது ஒரு அழகு நச்!
60 -க்கான இனிமையும் 20 -க்கான புதுமையும் right mix -இல். (1960 - 2020)
ஒரு பாடலை முதல்முறையாக ஒரு தடவை கேட்டு முடித்ததும் உங்கள் காதில் அதன் முதல் வரி ப்ளே பேக் செய்கிறதா? அதான் சிறந்த tune க்கு அடையாளம். 
பாடலின் இனிமையை ஒரு வார்த்தையில் சொன்னால்… மயிலிறகு! 
இந்த ஏ ஒன் பாட்டை தந்தவர் ஏ. மோசஸ். ஏகப்பட்ட ஃபேமஸ் ஆகிவிடுவார் விரைவில். சந்தேகமில்லை. 

மொழியின் அழகு வார்த்தைகளை பொறுக்கியெடுத்து எழுதியவர் கதிர் மொழி. இழைத்து இழைத்துப் பாடியவர்கள்: கௌரி லக்ஷ்மி  - ஹரி சரண்.
பாடல் லிங்க்:

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

பாடலை யூவில் கேட்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

//பாடலின் இனிமையை ஒரு வார்த்தையில் சொன்னால்… மயிலிறகு! //

நல்ல ஆழ்ந்த லயிப்பு.

பாடல் கேட்டேன் இனிமை, நன்றாக இருக்கிறது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!