Wednesday, November 22, 2017

நல்லதா நாலு வார்த்தை... 84

’சிலர் தாங்கள் செல்லுமிடமெல்லாம் 
சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.
மற்றவர் தாங்கள் சென்றுவிடும்போதெல்லாம்.’
- Oscar Wilde
('Some cause happiness wherever they go;
others whenever they go.')


'என்ன பெற்றுக்கொள்ள முடிகிறது 
அதிலிருந்து நம்மால் 
என்பதை வைத்து அளவிடப்படவேண்டும்
ஒரு புத்தகத்தின் மதிப்பு.'
- James Bryce
('The worth of a book is to be measured
by what you can carry away from it.')


’உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழி 
வேறு யாரையேனும் உற்சாகப்படுத்த முயல்வதுதான்.’
- Mark Twain
(”The best way to cheer yourself up is to try 
to cheer somebody else up.’)


'அறிவிலிதான் அளவிடுவான் தண்ணீரின் 
ஆழத்தை இரு கால்களாலும்.'
- African Proverb
('Only a fool tests the depth of water with both feet.')


’எங்கே நீ சென்றாலும் 
எல்லா உன் இதயத்தோடும் செல்.’
-Confucius
('Wherever you go, go with all your heart.')


’அதிசயங்களற்றுத் தவிக்காது
அவனி ஒருபோதும்;
அதிசயித்தலற்று மட்டுமே.’
-G. K. Chesterton
(’The world will never starve for want of wonders;
but only for want of wonder.’)


’மாற்றப்படவே உருவாக்கப் படுகின்றன 
அபிப்பிராயங்கள் -
மற்றெப்படி உண்மை 
அடையப்பட முடியும்?’
-Lord Byron
('Opinions are made to be changed - or 
how is truth to be got at?')


'எத்தனை உனக்கு சாத்தியமென 
எண்ணுகிறாயோ அதனினும்
எள்ளளவேனும் அதிகம் செய் தினமும்.'
-Lowell Thomas
('Do a little more each day than you think you possibly can.')


'அதிகாலை நாலு மணிக்கு 
அழைக்க முடிகிற நண்பர்கள் 
அமைந்திருப்பதுவே விசேஷம்.'
-Marlene Dietrich
('It's the friends you can call up at 4 a.m. that matter.')


'மற்றவர்கள் உன்னைப் பற்றி 
கொண்டிருக்கும் அபிப்பிராயம்
அவர்களின் பிரசினை,
உன்னுடையதல்ல.'
- Elisabeth Kubler-Ross
('The opinion which other people have of you
is their problem, not yours.')

><><><

3 comments:

கோமதி அரசு said...

நல்லாத நாலுவார்த்தை அருமை.

//’உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழி
வேறு யாரையேனும் உற்சாகப்படுத்த முயல்வதுதான்.’//

உண்மை உண்மை.

ஸ்ரீராம். said...

அருமையான தொகுப்பு. ரசிக்கத்தக்கக் கருத்துகள்.

எனக்கு மனதில் போட்டவாறு இருந்ததைக் கீழே கொடுத்திருக்கிறேன்!


சிலர் வந்தால் சந்தோஷம்சிலர் போனால் சந்தோஷம்!

எடுத்துக் கொள்ளும் அறிவைப் பொறுத்ததே படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் மதிப்பு!

அற்புதங்களுக்காக தவிப்பதில்லை உலகம், என்றாலும் காத்துக் கொண்டே இருக்கிறது அடுத்த அற்புதம் நிகழ

என்றும் சொல்லலாமோ!

மாறிக்கொண்டே இருக்கும் அபிப்ராயங்களால் அடைய முடிகிறது மாறாத உண்மையை!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!