Tuesday, August 16, 2016

அவள் - கவிதைகள்...

291
ஒரு பார்வையை வீசிவிட்டு
சும்மா போனால் எப்படி? 
ஒரு கை கொடு,
எழுந்து கொள்கிறேன்.


292
துருவத்தில் உருகும் பனியை உன்
புருவத்தின் கீழ் குளிர்ப் பார்வை
சமனப் படுத்துகிறது.

293
உன்னுடன் செல்வதற்கும் 
தனியே நான் செல்வதற்கும்
உணர முடியவில்லை வித்தியாசம்.

294
புன்னகை புரிந்தபடியே
பேசாதே.
புன்னகை மட்டுமே
புரிகிறது.


295
அத்தனை வார்த்தைகளையும் 
கேட்டுவிட்டு நீ கொட்டும் ஓரு உம்
அத்தனைக்கும் பதிலாய்...

296
நீ அகன்றுவிட்டாய் அங்கிருந்து.
மனதை நகர்த்த முடியாமல் 
நான்.

297
என்னை ஒரு செல்ஃபி
எடுத்தால்
தெரிகிறாய் அதில்
நீயும்.


298
இரண்டா இருபதா,
அடிக்கடி சந்தேகம்,
உன் கண்கள்.

299
முழுக்கண் பார்வையில் 
அரைக் கிறுக்கன் ஆனேன்.
என்றிரக்கமுற்று 
அரைக்கண் மூடிப் பார்த்தாய்
ஆனேன் முழுக் கிறுக்கு.


300
எப்படி நம்பாமலிருப்பது
ரிலேடிவிடி தியரியை
நீ 
இளமையாகிக் கொண்டே போகும்போது?

><><><

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அவள்-கவிதைகள்
அருமை-கவிதைகள்
வாழ்த்துக்களுடன்....

கரந்தை ஜெயக்குமார் said...

நீ அகன்றுவிட்டாய் அங்கிருந்து.
மனதை நகர்த்த முடியாமல்
நான்.


அருமைஅருமை நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதைகள்! பாராட்டுக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!