Friday, August 5, 2016

அதுவும் முக்கியமே...

அன்புடன் ஒரு நிமிடம் -104.
                                                                                                                                                                            
 வினோத் வீட்டில்... கோபமாக அவன். சோகமாக யமுனா. 
வியப்புடன் தியாகு, “என்ன பிரசினை?”
”நீங்களே சொல்லுங்க. அப்பா தன்னோடு வரணும்னு பையன் அடம் பிடிக்கிறான்.அவனுக்கு பீச் போகணுமாம். ஜாமிட்ரி பாக்ஸ் வாங்கணுமாம். லைப்ரரியில் புக் மாத்தணுமாம். அப்பா கூடவந்து செலக்ட் செய்து தரணுமாம். இவர் என்னன்னா அடுத்த வாரம் போகலாம்கிறார்.”
“ஆமா. சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.” என்றான் வினோத்.
”இதெல்லாம் ஒரு பிரசினையா... இப்ப நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லு.” என்றான் தியாகு.
இவன் வேறே... என்ன சொல்லப் போகிறான்?
"ஒரு சூழ்நிலையை கற்பனை பண்ணிக்க. இதே மாதிரி ஒரு பிற்பகல்.  அஞ்சு மணி நேரம் உன் கையில இருக்கு.  உன் பையன் உன்னோட வெளியே போகணும்னு ஆசையா சொல்லிட்டிருக்கிறான். அதே சமயம்  உனக்கு ஒரு போன் வருது.  அப்பாவுக்கு நெஞ்சு வலி, ஐ.சி.யூ.வில் அட்மிட் ஆகியிருக்கு, உடனே வான்னு. இப்ப நீ எதை செய்வே?"
"அப்பாவைப் பார்க்க ஓடுவேன்."
"ஏன் அப்படி?"
"என்ன கேள்விடா இது...அந்த விஷயம்தானே அந்த ரெண்டில முக்கியமானது?” 
“ரைட்இன்னொரு சூழ்நிலை.  பையன் உன்னோட வெளியே போகணும்னு சொல்ல... அப்ப தகவல் வருதுஉன் மனைவி போன ஸ்கூட்டர் ஒரு பைக்ல மோதி அந்த வண்டி சேதமாகி வொர்க் ஷாப்பில் நிற்கிறாஇப்ப எங்கே போவே?”
”யமுனாவைப் பார்க்கத்தான்.” 
’காரணம்?”
”முந்தி சொன்ன அதே காரணம்தான்.”
”அடுத்த சூழ்நிலையில் உன் மானேஜரிடமிருந்து போன்.  ப்ராஜெக்டில் ஒரு கோளாறு. காலையில கிளையண்டுக்கு தரணும். உடனே நீ வந்தால்தான் சரி பண்ண முடியும். அங்கே போவியா இல்லை, பையனுடன் கிளம்புவாயா?’ 
”அதெப்படி? ஆபீசுக்குத்தான் ஓடுவேன்.” 
”ரெண்டுமே முக்கியம் அல்லவா?’
’முக்கியம்தான். அதில அதுக்கு அடுத்தபடியா இது முக்கியம். அதனால அந்த விஷயம் வந்ததால் இது செய்யமுடியாது.”
”ரைட்,” என்ற தியாகு அமைதியாக சொன்னான், ”அப்படீன்னா இப்ப உன் முன்னாலிருக்கிற சூழ்நிலையில அந்த மாதிரியான எந்த நிலைமையும் இல்லை. அப்படி எந்த ‘அதைவிட முக்கிய வேலை’யும் இல்லாத வரையில் நீ இதைதானே செய்யணும்? பையனை அழைச்சிட்டு போகிறதுதானே உன் முதல் அண்ட் ஒரே வேலையா இருக்கணும்?”
லாஜிக் சரிதான் என்றான் நண்பனிடம். புறப்படுடா. என்றான் பையனிடம்.
<><><>
(’அமுதம்’ பெப்.2015  இதழில் வெளியானது)

4 comments:

ரிஷபன் said...

லாஜிக் சரி

Yaathoramani.blogspot.com said...

எது முக்கியமென்பதை
மிக அருமையாய்ச் சொல்லும் பதிவு அருமை
வாழ்த்துக்களுடன்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைநண்பரே

வெங்கட் நாகராஜ் said...

சொல்லிப் புரியவைக்கும் விதம்..... நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!