Wednesday, August 24, 2016

அவள் - கவிதைகள்

301
ஒரு வார்த்தை உதிர்த்தாய்,
பூக்கள் அதில் தங்களைக் கோர்த்து
மாலையாகிக் கொண்டன.


302
எதற்கோ ஒரு சிரிப்பு..
எப்போதும் புன்னகை..
எப்படி முடிகிறது உன்னால்?

303
இந்த வழியே வந்திருக்கிறேன்
உன்னுடன்.
எந்த ஜென்மத்தில் 
என நினைவில்லை.


304
வந்து வந்து கொஞ்சுகிறாய்,
சீண்டுகிறாய், 
பக்கத்தில் இல்லாத நேரம் என்
நினைவில்.

305
எந்த ஓசையும் கேட்கவில்லை,
உன் கொலுசொலி கேட்கையில்.

306
நானில்லாத பொழுதிலும் 
உன்னைத் தழுவிக் கொண்டே...
என் நினைவுகள்.

307
ஆ, உன் கண்கள் 
சிரிக்கத் தொடங்கிவிட்டன,
நான் 
வெறுமையற்றுப் போகிறேன்.


308
ஒரு பார்வை பார்த்தாய் 
வெளிச்சங்கள் வெட்கிப்போய்
நிழலுக்குள் ஒளிந்து கொண்டன.

309
என் வாழ்க்கைக்கு
கனவுகளையும்
கனவுகளுக்கு 
வாழ்க்கையையும்
கொடுத்தாய்.

310
உன் நடை மெதுவாக ஆக
என் இதயம் வேகமாக...

<<<>>>

3 comments:

ரிஷபன் said...

கவிப்பூக்கள் மாலையாகிக் கொண்டன உங்களிடம்

Rekha raghavan said...

அனைத்துமே அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!