Sunday, December 2, 2012

அன்பின் இழைகள்



நொடியின் துகள்களுக்குள்
நட்பைப் புகுத்திடுவோம்.

அன்பின் இழைகளைக் கோர்த்தொரு
ஆடை அணிந்திடுவோம்.

நாவின் அசைவுகளினூடே
நல்லெண்ணம் மென்றிடுவோம்.  

நம்பிக்கையின் சுவடுகளை
நடையில் பதித்திடுவோம்.

உன்னதத்தின் கொம்பினால்
உச்சி வகிடெடுப்போம்.

பார்வையின் வண்ணமதை
பரிவென்று வைத்திடுவோம்.

மனமெனும் ஆடியில்
மகிழ்வைப் பிரதிபலிப்போம்!

<<<>>>

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் இழைகள் எழுத்துக்களில் மின்னுகின்றன.

பாராட்டுக்கள்.


[அவை எழுத்துக்களில் மட்டுமே எப்போதும்
மின்னிட முடிவது சாத்தியம் என்பதே சத்தியம்.]

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - கவிதை அருமை - நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை.

ராமலக்ஷ்மி said...

அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை....

கதம்ப உணர்வுகள் said...

அன்பில் இருந்து நட்பு தொடங்கி.... நட்பில் இருந்து நல்லவை பகிர்ந்து.... நல்லவையில் இருந்து எல்லாமே அருமையாக இருக்கிறது.....

துகள்களில் நட்பை புகுத்தும் - வித்தியாசமான சிந்தனை....

அன்பின் துளிகளை நாம் பகிர்ந்தால் அதே அன்பு பெருவெள்ளமாய் நம்மை அணைத்து காக்கிறது....

உலமே அன்புமயமாகிவிடுகிறது...

அற்புதமான சிந்தனைத்துளிகள் ஜனா......

ரிஷபன் said...

உன்னதத்தின் கொம்பினால்
உச்சி வகிடெடுப்போம்.

ஆஹா !

Rekha raghavan said...

நல்ல சிந்தனைக் குவியல்.

ரேகா ராகவன்.

Yaathoramani.blogspot.com said...

ஆழமான அருமையான சிந்தனை
வார்த்தை வண்ணங்க்களால் தீட்டப்பட்ட்ட
அழகிய கவிதை ஓவியம் அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!