Tuesday, March 27, 2012

முடியாதெனினும்...


ரைந்திடும் மழை மட்டும் மனக்
கவலையை கரைக்க முடியுமானால்?
வீசிடும் தென்றல் மட்டும் சற்றே
வெஞ்சினம் அகற்ற முடியுமானால்?
விழுங்கிடும் இனிப்பு மட்டும் மன
எரிச்சலைக் குறைக்க முடியுமானால்?
பளிச்சிடும் மின்னல் மட்டும் வீண்
பயங்களைக் கொய்ய முடியுமானால்?
முழங்கிடும் இடி மட்டும் பல
முனகல்களை நிறுத்த முடியுமானால்?
படர்ந்திருக்கும் பச்சை மட்டும் சில
பார்வைகளை மாற்ற முடியுமானால்?
வண்ணம் தீட்டும் வானவில் மட்டும்
எண்ணம் தீட்ட முடியுமானால்?
முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...
<<<>>>

13 comments:

Rekha raghavan said...

//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//

அத்தனையையும் எண்ணிப் பார்த்து நாங்களும் சுகம் அடைய அருமையான கவிதையாய்.

ADHI VENKAT said...

//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//

ஒரு வித திருப்தியும், சந்தோஷமும் தான்.....

ஒவ்வொன்றும் அருமையான வரிகள் சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//

முடியாதெனினும் எதையுமே கற்பனை செய்து பார்ப்பதில் ஒரு கண சுகம் நிச்சயமாகக் கிடைக்கிறது என்பது உண்மையே!

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

RVS said...

இதை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாதெனினும்...

ரொம்ப நல்லாயிருக்கு சார்! :-)

Yaathoramani.blogspot.com said...

அருமை
கற்பனை தரும் அற்புத சுகம்
கண நேரம்தான் ஆயினும்
அதன் சுகமே தனி
அதை மிக அழகாகச் சொல்லிப் போகும்
தங்கள் படைப்பு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma2

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு சார்....

குறையொன்றுமில்லை. said...

முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...

பால கணேஷ் said...

ஆஹா... அந்த முத்தாய்ப்பு வரிகள்... அருமை! ‘பா’வை மிக ரசித்தேன்!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்.. //.
சுகமான சிந்தனைகள்!

ஹேமா said...

கிடைக்காத ஒரு சுகத்தை நினைத்துப் பார்ப்பதில்தான் எத்தனை சுகம்.மிக அற்புதமான சிந்தனை !

ரிஷபன் said...

கவிதையில் முடிந்ததே..

ராமலக்ஷ்மி said...

/முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்.../

இயலாது இதை மறுக்க...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!