Monday, September 19, 2011

வாய்ப்பு


வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.
கண் முன் நிகழ்ந்தது அது.
லாரி மீது மோதி
எகிறித் தெறித்த பைக்கிலிருந்து
இடம் பெயர்ந்து முகம் பேர்ந்து
அந்த வாலிபன்...
ஓடிச்  சென்று தூக்கி
ஆட்டோவில் ஏற்றி...
உதவிடலாமா...?

தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.



15 comments:

Rekha raghavan said...

//வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.//

காலத்தின் அருமையை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி விளக்கிய உங்களை என்னால் மறக்கவியலாது.

settaikkaran said...

சூப்பர்! அந்த ஒரு வினாடியைத்தான் Golden Moment என்று அவசர சிகிச்சை மருத்துவர்கள் சொல்கிறார்கள். நச்சென்று ஒரு கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது.
நன்றே செய், அதுவும் இன்றே செய், அதுவும் இப்போதே உடனே செய் என்பது தெளிவாகியது. vgk

ரிஷபன் said...

தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது

தக்குடு said...

கவிதை மிகவும் கூர்மையாக உள்ளது. சொல்லவந்த விஷயம் தெளிவாக வெளிவந்துள்ளது! வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

ஒரு மின்னல் இடைவெளியில் காலம் எத்தனை பொன் போன்றது என்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்!

குறையொன்றுமில்லை. said...

காலம் பொன் போன்றதுதான்.

வெங்கட் நாகராஜ் said...

சில வரிகளே ஆனாலும் மிகவும் உண்மையானதோர் விஷயம்! வாய்ப்பு யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

ADHI VENKAT said...

சுருக்கமாக சொன்னாலும்
நறுக்கென்று சொல்லி விட்டீர்கள்.
காலம் யாருக்காகவும்
காத்திருக்காது என்று......

ராமலக்ஷ்மி said...

வாய்ப்பு. ஆம் தவறவிட்டால் வராது. மிக அருமையான கவிதை.

G.M Balasubramaniam said...

காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது. யார் உபயோகப் படுத்தினால் என்ன,?வாய்ப்பு உணர்ந்து கொள்ளப் பட்டால் சரி.

Mahi said...

நல்ல கவிதை! கடந்த வினாடிகள் என்ன செய்தாலும் திரும்பக்கிடைக்காது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்...காலம் யாருக்காகவும் காத்திருக்காது!

இராஜராஜேஸ்வரி said...

தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.

புரிந்து கொண்ட பொன்காலம்!

CS. Mohan Kumar said...

ஒரு சம்பவத்தை கவிதையாக்கி விட்டீர்கள். கண் முன் விரிகிறது அந்த சம்பவம் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!