Monday, February 19, 2024

கண்களே டெலஸ்கோப்...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா! என்று ஆச்சரியப்பட வைத்தவரை 'வானியலின் அப்பா' என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள்.
இவர் சொன்னதில் சில சந்தேகங்களும் கிளம்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரநாம தான் சுத்திட்டு பஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் கண்டிப்பாக இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர், அதிவிரைவில் பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டரை வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு.
சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. 'Copernicium'.
சொன்னாரு பாருங்க நச்னு ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!