Monday, February 12, 2024

தாகூரும் நேருவும் பாராட்டிய...


12 வயதில் இவர் எழுதிய 'Maher Muneer' என்ற நாடகத்துக்கு அளப்பரிய பாராட்டு கிடைத்தது...
16 வயதில் லண்டனிலும் கேம்பிரிட்ஜிலும் மேற்படிப்பு தொடர்ந்தார்.
தந்தை நிஜாம் காலேஜ் பிரின்சிபால். தாய் கவிதாயினி.
கோவிந்தராஜுலு நாயுடு என்ற டாக்டரை லண்டனில் காதலித்து மணந்து கொண்டார்.
தாகூரும் நேருவும் பாராட்டிய கவிதைகளை எழுதியவர். Nightingale of India என்று அழைக்கப்பட்டவர்...
'In the Bazaars of Hyderabad' என்பது இவரின் ஒரு புகழ் பெற்ற கவிதை. மற்றொரு பிரபல கவிதைத்தொகுதி ‘The Golden Threshold.’
கோபால கிருஷ்ண கோகலேயைச் சந்தித்தது வாழ்வில் திருப்பு முனை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது அப்போதுதான்.
உப்பு சத்தியாக்கிரகத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு வகித்து.... ஒன்றரை வருடத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைமையை ஏற்ற முதல் பெண்மணி.
கிழக்கு ஆப்பிரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் பயணித்து இந்தியர் நலனுக்காக பாடுபட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் தற்போதைய உத்திரபிரதேசத்தின் கவர்னராக பணியாற்றியவர்.
இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
சரோஜினி நாயுடு... (1879 - 1949) இன்று பிறந்த நாள்!
-------

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!