Sunday, May 24, 2020

என் இதயம் அடித்துக் கொள்கிறது...

அப்பா அறுபதுகளின் பிரபல மியூசிக் டைரக்டர். அற்புதமான பாடல்களை அந்தக்காலத்தில் வழங்கியவர். கண்ணைக் குளமாக்கும் ட்யூன்கள் முதல் காதல் சிலிர்க்கும் டியூன்கள் வரை நம் காதுக்குத் தந்தவர். ஒரு மகன் பிரபல நடிகர், தயாரிப்பாளர். அடுத்த மகன் அடியொற்றியது அப்பாவின் இசை வழியை. அவரைப்போலவே பிரபல மியூசிக் டைரக்டர்... தெரிந்திருக்கும் யார் என்று. ரோஷன்.. ராகேஷ் ரோஷன்.. ராஜேஷ் ரோஷன்.
Rajesh Roshan.. மே 24. பிறந்த நாள்.
மலையாளத்தில் லட்சுமி நாயகியாக நடித்த முதல் படம் ‘சட்டைக்காரி’. சக்கைப்போடு போட்டது. மாஸ்டர் தேவராஜன் தான் மியூசிக். அற்புதமான ட்யூன்கள். ஆங்கில பாடலொன்றுடன். அது இந்தியில் அதே லட்சுமியுடன் ‘Julie’ ஆனபோது அதி அற்புத ட்யூன்களைக் கொடுத்தார் ராஜேஷ் ரோஷன். அந்த ஆங்கிலப் பாடலைச் செல்லும்போதே மை ஹார்ட் இஸ் பீட்டிங்.. “My heart is beating…” பாடல்தான் அது. கிஷோர் பாடும் “Dil Kiya Kare..” புதுவிதமான பீட்ஸுடன் பீடு நடை போடும். அந்த வருட ஃபில்ம் ஃபேர் அவார்ட்!
ஆர். டி. பர்மனை ‘Chote Nawab’இல் அறிமுகப்படுத்திய பிரபல காமெடி நடிகர் மெஹ்மூத் தான் இவரையும் அறிமுகப்படுத்தினார் தன் ‘Kunwara Baap’ -இல். அந்த டைடில் ஸாங்… ‘நான்தான் குதிரை.. இதுதான் வண்டி..’யில் ஏறியவர் சென்றது வெகு தூரம். never looked back. படத்தின் கடைசியில் வரும் சோகப் பாட்டு, (“Aare Aaja Nindiya..”) நௌஷத், சங்கர் ஜெய்கிஷன் ரேஞ்சுக்கு இருந்தது.
Loot Maar, Mr Natwarlal, Kala Pathar, Des Parades… என்று ஆரம்பித்து வெற்றிப் பாடல்கள். My Fair Lady ஸ்டைலில் தேவ் ஆனந்த் எடுத்த பாடல் படத்தில் (‘Man Pasand’) தென்றலில் மிதக்கும் பாடல்களின் அனுபவம்...
முக்கிய திருப்பம்... ராகேஷ் ரோஷனின் மகன் ஒரு கதா நாயகனாக உருவெடுத்தார். Hrithik Roshan! லாஞ்சிங் படமான ‘Kaho Na Pyar Hai’ யில் சித்தப்பா போட்டுக் கொடுத்தார் சத்தான எட்டு ட்யூன்களை. அடுத்த பிலிம்பேர் அவார்ட்! விரைந்தோடி ரசிகர்கள் வாங்கியது ஒரு கோடி இசைத்தட்டுகள்.
பின் (முன்?) குறிப்பு: ”Jo Wadha Kiya Woh Nibhana Padega..” 1963 ஆம் வருடம் பிலிம்பேர் அவார்ட் வாங்கிய Binaca Geet Mala வில் பலப்பல வாரம் முதல் பாடலாக பவனி வந்த ‘தாஜ்மஹால்’ படப் பாடல் நினவிருக்கா? அப்பா ரோஷனுடைய அனேக முத்துக்களில் ஒன்று!

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் பல தந்தவர். தகவல்கள் சிறப்பு. தொடரட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

அறியாத தகவல்கள். நன்றி ஐயா

துளசிதரன்

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!