Tuesday, April 28, 2015

அவள்... (கவிதைகள்)

121.
உன்னைக் கவிதையில்
வடிப்பதற்குள் வந்துவிடுகிறது
மூன்றாவது வரி.
<>

122
எங்கே தொடங்கினாலும்
கடலில் முடியும் நதிகள்போல
என் நினைவுகள்.
உன்னிடம்.
<>

123
ஏழையாக இறக்க மாட்டேன்
பொக்கிஷமாக உன் நினைவுகள்.
<>

124
முடிவதில்லை ஒரு நாளும்
உனக்கு ஸீ யூ சொல்ல.
<>

125
மனதின் எங்கோ ஒரு
புள்ளியில் தொடங்கி
மனதையே ஒரு
புள்ளியாக்கிவிட்டாய்.
<>

126
எப்படி இருக்க முடிகிறது
உன்னால் மட்டும்
அப்படி ஒரு நீயாக?
<>

127
உன் இமைகளின் படபடப்பில்
கொட்டிச் சிதறின என்
மனதிலிருந்த கவிதைகள்!
><><><

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கே தொடங்கினாலும்
கடலில் முடியும் நதிகள்போல
என் நினைவுகள்.
உன்னிடம்.

அருமை நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

ஒரே புள்ளி சிறப்பு...!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
இரசித்தேன்.. அருமையாக உள்ளது

எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை....

// ஏழையாக இறக்க மாட்டேன்
பொக்கிஷமாக உன் நினைவுகள்.

பொக்கிஷமான நினைவுகள்.....

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று. குறிப்பாக அந்தப் பொக்கிஷ நினைவுகள்.

Unknown said...

ஏழையாக இறக்க மாட்டேன்
பொக்கிஷமாக உன் நினைவுகள்

நன்று!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!