Wednesday, April 15, 2015

நல்லதா நாலு வார்த்தை... 45.



’எத்தனை அதிகம் 
பரிவு செலுத்துகிறீர்களோ 
அத்தனை குறைவாய் 
அது தேவைப்படும் 
உங்களுக்கு.’
- Malcolm Forbes
(‘The more sympathy you give,
the less you need.’)
<>

’ஆகாரத்துக்கு உப்பு,
அழகுக்குப் புன்னகை.’
- Carlo Dossi
(’A smile is to beauty what 
salt is to food.)
<>

;ஒரு கூடை ஞாபகங்கள்
ஒரு சிறிய நம்பிக்கைக்கு
ஒருபோதும் ஈடாகா.'
- Charles Schultz
(‘A whole stack of memories never
equal one little hope.’)
<>

‘செய்ய முடியாதது
செய்ய முடிவதற்குக் 
குறுக்கே நிற்க விடாதீர்கள்.’
- John Wooden
(`Do not let what you cannot do
interfere with what you can do.’)
<>

'ஒரு போதும் சொல்வதில்லை 
இயற்கை ஒன்றும் 
விவேகம் வேறொன்றும்!'
- Juvenal
(`Never does nature say one thing
and wisdom another.')
<>

`வாழ்க்கையின் பெரும் பயன்,
அதற்கு அப்பாலும் 
நீடித்திருக்கும் ஓர் விஷயத்திற்காக 
அதை செலவிடுவதே.’
-William James
(`The great use of life is to spend it for
something that will outlast it.’)
<>

'ஓடுவது நதியல்ல,
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'
- Herve Bazin
(`It’s not the river that runs. but the water.
It’s not time that passes but us.’)

><><><

7 comments:

தி.தமிழ் இளங்கோ said...

இன்றைய எனது சூழலில் அனைத்து பொன்மொழிகளும் எனது நினைவுகளை அசை போட வைத்தன. பகிர்வுக்கு நன்றி.
த.ம.2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் பொன்மொழிகளும் அருமை. சிறப்பான தமிழாக்கமும். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

'ஓடுவது நதியல்ல,
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'

அருமை
உண்மை
நன்றி நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ஒரு விசயத்திற்காக செலவிடுவது மிகவும் பிடிக்கும்...

balaamagi said...

அத்துனையும் அருமை,,,,,,, வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!