Friday, July 5, 2013

நல்லதா நாலு வார்த்தை.... 11


இன்றைக்குத் தெரியும்

இதயத்துக்கு;. .

நாளைக்குப் புரியும்

மூளைக்கு.

James Stephens

(‘What the heart knows today the head will understand tomorrow.’)

<>

கண்ணுக்குத் தெரிவதைப்

பிரதிபலிப்பதில்லை ஓவியம்;

தெரிய வைக்கிறது.

- Paul Klee 

(‘Art does not reproduce the visible, but makes visible.’)

<>

விட்டுத் தள்ள

வேண்டியதறிவதே

விவேகம்.

-William James

(‘Wisdom is learning what to overlook.’)

<>

எப்படி இருக்கிறது

என்று பார்க்க வேண்டும்

எப்படி இருக்க வேண்டும்

என்றல்ல.

-Albert Einstein

(‘A man should look for what is, and not for what he thinks should be.’)

<>

நீளமல்ல முக்கியம்

வாழ்க்கையின்

ஆழமே!

-Emerson

(‘It is not length of life but depth of life.’)

<>

விஷயங்கள் அநேகமாய்

நடந்துவிடும் சரியாக

ஆனால்

வெறுமேபார்த்துக் கொண்டிருக்க

சில நேரம்

வேண்டும் உறுதியான மனம்.

-Hedley Donovan

(‘Things will probably come out all right, but sometimes it 

takes strong nerves just to watch.’)

<>

வரும் ஒளி உணர்ந்து

இருள் விலகுமுன்

கருக்கலில் பாடும் பறவையே

நம்பிக்கை.

-RabindranathTagore

(‘Faith is the bird that feels the light

and sings when the dawn is still dark.’)


<<<>>>

(படம்- நன்றி:கூகிள்)

15 comments:

ராஜி said...

விவேகம் நல்லா இருக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதா நாலு வார்த்தை.... நல்லாவே இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

ஆழமான அர்த்தம் பொதிந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழம் உட்பட அனைத்தும் அருமை...

கவியாழி said...

அனைத்துமே அறிவார்ந்த தத்துவங்கள் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொன்றுமே அருமை அய்யா

கோமதி அரசு said...

எல்லா பொன்மொழிகளும் அருமை.

கருக்கலில் பாடும் பறவையே

நம்பிக்கை.’//
எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

sathishsangkavi.blogspot.com said...

நல்லதா நச் என்ற வரிகள்...

ADHI VENKAT said...

எல்லா வார்த்தைகளுமே அழகாக உள்ளன...

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று.

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா..

வணக்கமுடன் ஹ ரணி.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அதற்கு ஒரு திறம் வேண்டும்.

எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

கவிதைகள் சொல்லும் கருத்துக்களும் எளிமையாக உள் நுழைபவை.

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தம் பொதிந்தவை...

//விட்டுத் தள்ள
வேண்டியதறிவதே
விவேகம்.’//

இது மட்டும் கிடைத்துவிட்டால் வெற்றி தான்!

ஷைலஜா said...

ஜனாவின் கைவண்நத்தில் எல்லா வார்த்தையுமே நன்றாக இருக்குமே! இது மட்டும் என்ன !

ஷைலஜா said...

கைவண்ணத்தில் என்று பிழையைத்திருத்துவதற்குள் அந்த மடல் பறந்துவிட்டது:)

Kavinaya said...

அழகான மொழிபெயர்ப்பு. குறிப்பாக 'கருக்கலில் பாடும் பறவை' மிகப் பிடித்தது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!