இரையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கண்டு நீ
ஒருநாளும் நம்பிடாதே…!"
- அவரெழுதிய பாடல்களில் ஒன்று.
குறுகிய காலமே என்றாலும் கோலோச்சியிருக்கிறார் திரையுலகில் 'பாட்டுக் கோட்டை'யாக...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... இன்று பிறந்தநாள்!
கவிதையை பாடலாகத் தந்தவர்!
எம். எஸ். விஸ்வநாதனை அசத்திய அவரின் நாலு வரிகள்: ('பாசவலை')
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி மாட்டிக் கிட்டா கொறவனுக்கு சொந்தம்"
காய்ச்சலில் படுத்திருக்கும் தங்கையின் காதலனை தூங்கவைக்கப் பாடுகிறாள் தானும் அவனைக் காதலிக்கும் தமக்கை. இசைக்கும் சரி, காதலுக்கும் சரி, பொருத்தமாக அந்தப் பல்லவியை!
"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும்." ('கல்யாணப் பரிசி'ல்.)
முரளி அல்ல, சந்திரபாபு ஆயிற்றே.. ஆகவே பளிச்சென்று சொல்லுகிறார் தன் காதலை!
"...கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக? மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக!"
"உனக்காக, எல்லாம் உனக்காக.." பாடலில். ('புதையல்')
'உன்னை நினைக்கையிலே, கண்ணே..' பாடலில் அந்த வர்ணனை:
"பொன்னை உருக்கிய வார்ப்படமே... அன்பு
பொங்கிடும் காதல் தேன் குடமே."
தத்துவப் பாடல்களில் முத்துக்களைக் கொடுத்திருக்கிறார் என்றால் அவரின் பக்தி வரிகள் பரவசமூட்டும். பிரபல 'தில்லை அம்பல நடராஜா..' பாடலில் தொடக்க வரிகள்..
"கங்கை அணிந்தவா.. கண்டோர் தொழும் விலாசா..
சதங்கையாடும் பாத விநோதா.. லிங்கேஸ்வரா..
நின் தாள் துணை நீ தா."
திரைப் பாடல் வரிகளுக்கு ஒரு கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு கொடுத்தவர். புருவமுயர் எதுகையிலும் இயல்பு நவில் இயைபிலும் வரிகளின் இறுதியை அவர் வரையும் விதமே அலாதி:
"காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி..
கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி."
"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அனேக நன்மையே!"
"துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே.."
"சீமான்கள் கொண்டாடும் மேடை
செண்டாலே காற்றெல்லாம் வாடை
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை.."
"மனிதனாக வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா."
"ஆடைகட்டி வந்த நிலவோ? - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?"
அப்புறம் அவரின் அந்த முத்திரை வரிகள்...தறியில் நெய்து கொண்டே பத்மினி பாடும்..
"சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி..
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி."

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!