சொல்ல்லியிருக்க வேண்டாம், “நல்ல சூபரா இருக்கு, கிழங்கை பதமா அவிச்சிருக்கே… நானேகூட பண்ணிடலாம் போல!…”
அரை செகண்ட் அமைதி. “ஆமா. பண்ணிடலாம். அடுத்த வாட்டி பண்ணிடுங்க. சொல்லட்டுமா?”
“எதுக்கு வீணா இப்ப? சொல்லும்போதே பண்ணிடறேன்.” வாயில் வழுக் வழுக் கிழங்குடன்.
அடுத்த வாட்டி வாட்டியதை அப்படியே…
“அரை கிலோ கப்பக் கிழங்கையும் சின்ன சின்ன பீஸா…” வெட்டிட்டேன்.
“அப்படியே தண்ணியில போட்டு வைங்க.” வைத்தேன்.
“இன்னொரு பாத்திரம் எடுங்க. மூழ்கிற அளவுக்கு தண்ணியை விட்டு…”
“நானா?”
“கிழங்கு!”
“என்னையா?” கொதித்தேன்.
“கிழங்கை சொன்னேன். கொதிக்க வையுங்க.”
கொதித்தது.
“வெட்டின கிழங்கை இப்ப போடுங்க. வெந்ததும் தண்ணியை வடிகட்டி இறக்கிடணும்.”
“அவ்வளவுதானா? முடிஞ்சதா?”
“ஆரம்பிச்சிருக்கு. தேங்கா துருவிட்டீங்களா?”
“தேங்க்.. தேங்காயா?”
“ஓரு பிடி.” துருவினேன்.
“மிக்ஸியில போடு."(‘ங்க.’ மிக்ஸி சத்தத்தில கேட்டிருக்காதுன்னு எனக்குள் சொல்லிக்கிட்டேன்.)
“கூட ரெண்டு மிளகா வத்தல். அரை டீஸ்பூன் சீரகம். கால் மஞ்சள் பொடி. பத்து மிளகு. ரெண்டு பல் பூண்டு. ஒரு சின்ன வெங்காயம்.”
“அம்புட்டுமா?”
“அம்புட்டும்.”
“அரைச்சு கடைசில கருவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றியெடுத்து அந்த கிழங்கில கொட்டுங்க. அரை ஸ்பூன் உப்பு ஞாபகமிருக்கட்டும்.”
“அவ்வளவுதானா?” கை கழுவலாம்னா…
“அப்படியே மிக்ஸில டம்ளர் தண்ணி விட்டு கழுவி அதில சேருங்க.”
சேர்த்ததும்… “இனி தாளிக்கணும்.”
அது வேறயா? வாணலியை அடுப்பில் வைத்தேன். “உளுத்தம் பருப்பு?”
“கடுகும்.”
“அப்புறம் மிளகா வத்தல்?”
“ஆமா.”
“கறிவேப்பிலை?”
“சொல்லணுமாக்கும்? சரி, இனி அந்த கிழங்கு கலவையை இதில கொட்டுங்க. அதே பாத்திரத்தில அரை கப் தண்ணியை விட்டு அலசி கொட்டுங்க.”
“அதிலதான் அலசி கொட்டணுமா?”
“ருசியாதான் வேணுமா?”
“கொதிக்கட்டும் ரெண்டு நிமிஷம்.”
கொதிச்சதும் வந்திட்டதா பார்க்கணும் அந்த மணமும் கலரும்.
…ருசியும்!

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!