Saturday, May 7, 2022

கெலிக்க முடியாத எலிகள்...



ஹேம்லின் நகரத்தில் கெலிக்க முடியாத எலித்தொல்லை. எதுவும் பலிக்கவில்லை. என்னிடம் விடுங்கள் என்று வந்தார் அந்த பைப் வாசிப்பவர். 40000 ரூபாய் பேசுகிறார்கள். அவன் பைப் வாசித்ததும் அத்தனை எலிகளும் கேட்டுக் கிறங்கி அவன் பின்னால் பைப் லைனாக அணிவகுத்தன. அப்படியே அழைத்து சென்று ஆற்றில் நடந்து எலிகளை மூழ்க வைத்தான். எலிகள்தான் எலிமினேட் ஆயாச்சே? 2000 தான் தருவேன் என்கிறார்கள். அவன் மறுபடியும் பைப்பை வாசிக்கிறான். கேட்டு மயங்கிய அந்த ஊர் குழந்தைகள் அவனைத் தொடர அழைத்துச் செல்கிறான் காட்டுக்கு...

‘The Pied Piper of Hamelin’ பிரபலமான அந்தக் கவிதையை எழுதியவர் ...

Robert Browning.. இன்று பிறந்த நாள்.

நோய்வாய்ப்பட்ட அவருடைய பப்ளிஷர் நண்பர் மகன், நேரம் போகாமல் படம் வரைவதற்கு ஒரு கதை கேட்டபோது இவர் கவிதையாக சொன்னதுதான் இந்தக் கதை.



அப்பா வைத்திருந்த 7000 புத்தக லைப்ரரி ஆர்வத்தை கிளப்ப, சின்ன வயதிலேயே தீர்மானித்துவிட்டார் கவிஞராக வேண்டும் என்று.

கவிதாயினி Elizabeth Barrette மீதான காதல் ஒரு காவியக் கதை.

ஆழமான வரிகளை வரைந்தவர். சில இதோ...

‘எட்டுவதற்கு மேலாக இருக்க வேண்டும் மனிதன் அடைவது; சொர்க்கம் என்று ஒன்று இருப்பது வேறு எதற்காக?’

'பளிங்கு என்று இளமை நினைத்ததை, பனித்துளி என்று கண்டுபிடிக்கிறது முதுமை!'

‘என் சூரியன் மறைவது, மீண்டெழுவதற்கே.’

‘எளிய அழகு மட்டுமே உங்களுக்கு கிடைத்தது வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் 

கடவுள்  உருவாக்கிய மிகச்சிறந்தது உங்களுக்கு கிடைத்திருக்கிறது  என்று அர்த்தம்!’

‘அன்பு, அச்சம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை:

இவற்றால் ஆனதே  மனிதம். இவையே அதன் அடையாளம், லயம், தன்மை.’

‘எவ்வளவு வருத்தமாக, எவ்வளவு மோசமாக எவ்வளவு கிறுக்குத் தனமாக இருந்தது! ஆனால் எப்படி அது இனிமையாக இருந்தது?’

>><<


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தேர்ந்தெடுத்து பகிர்ந்த வரிகள் அனைத்தும் சிறப்பு. தகவல் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!